Skip to main content

அலையாத்தியை அழிக்க எமனாக வரும் ஹைட்ரோகார்பன் 

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் பிச்சாவரம் அமைந்துள்ளது. பிச்சாவரத்தில் இயற்கையின் அரணாக கடல் முகத்துவாரத்தில் சதுப்பு நிலப் பகுதியில் அலையாத்தி காடுகள்   5 ஆயிரம் ஏக்கர் ச.மீ பரப்பளவில் இயற்கைசூழலுடன் அமைந்துள்ளது.

 

இந்தக் காட்டில் மருத்துவகுணம் கொண்ட   சுரப்புண்ணை , தில்லை, திப்பராத்தி, வெண்கண்டல்,நீர்முள்ளி, பண்ணுக்குச்சி, நரிகண்டல், கருங்கண்டல் எனும்  20 வகையான தாவரங்களும்,  வங்காரவாசி, உயிரி, கோழிக்கால், உமிரி, சங்குசெடி, பீஞ்சல் உள்ளிட்ட 18 வகையான மூலிகை தாவர செடிகள்   உள்ளது.

 

k

 

அரிய வகை மருத்துவ குணம் கொண்ட இந்த வனப்பகுதியை தமிழக  வனத்துறை கட்டுபாட்டில் பராமரித்து வருகிறது.  இந்த காடுகளிலுள்ள அரிய வகை மூலிகை மற்றும் மருத்துவ குணம் கொண்ட மரங்களை ஆய்வு செய்ய அண்ணாமலை பல்கலைக்கழக தாவரவியல் துறை மாணவர்கள்.  வெளிநாடுகளில் தாவரவியல் கல்வி கற்கும் மாணவர்கள் பிச்சாவரத்திற்கு வந்து தங்கி இந்த பகுதியிலுள்ள அரிய வகை மூலிகை செடிகளை  ஆய்வு செய்து வருகிறார்கள்.  இதில் பல பேர் ஆராய்ச்சிக்கான டாக்டர் பட்டத்தையும் பெற்றுள்ளனர்.


 இந்த அலையாத்தி காட்டில்  நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்வாய்களும் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டவையாக உள்ளது. இதனால் இந்த இயற்கை எழில் அழகை ரசித்து செல்ல உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்  பிச்சாவரம் அலையாத்தி காடுகளுக்கு வந்து சதுப்பு நிலத்தில் படகு சவாரி செய்ய தினந்தோறும்  வருகை தருகின்றனர்.   கோடை காலங்களிலும் பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் அரசு விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தவாறு உள்ளது.

 

k

 

மேலும், கடந்த 2004ஆம் ஆண்டு இந்த பகுதியில் சுனாமி பேரலை ஏற்பட்டது. அப்போது பரங்கிப்பேட்டை பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். ஆனால் அதன் அருகிலே உள்ள பிச்சாவரத்தை சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமத்தில் வசிக்கும் மக்களை சுனாமியிலிருந்து இந்த அலையாத்தி காடுகள் பாதுகாத்தது. இதனால் இந்த பகுதியில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இப்படி உலகப் புகழ் பெற்ற இந்த அலையாத்தி காடுகளுக்கு தற்போது மோடியின் தலைமையிலான பிஜேபி அரசு ஹைட்ரோகார்பன் என்ற திட்டத்தின் மூலமாக பிச்சாவரம் காட்டுப்பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு கிணறு அமைக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

 

இதனால் இந்த பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள், அரியவகை மரங்கள், செடிகள் மூலிகைச் செடிகள், அழியும் நிலையை நோக்கி செல்லும் மேலும் இந்த பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் சுற்றுலா மையம் அதை நம்பியுள்ள குடும்பங்கள், மீனவர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தால் வாழ்வாதாரத்தை இழக்க கூடிய நிலை ஏற்படப்போகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த காலங்களில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்தது. மேலும் இந்த திட்டங்கள் குறித்து தற்போது விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கரவாகனம் மூலம் கிராமப்புறங்களிலுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்யவும் அறிவித்துள்ளது.

 

k

 

இந்தத் திட்டம் குறித்து காவிரி டெல்டா நீர் ஆதார அமைப்பின் தலைவரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கிள்ளைரவீந்திரன் கூறுகையில், ஆரம்ப காலத்தில்  சிதம்பரம் நகரம் என்பது தில்லை வனகாடுகளாக இருந்துள்ளது. இதனால் தற்போதும் சிதம்பரத்தை தில்லை என்றும் கூறுவார்கள்.

 

தில்லை மரங்கள் தற்போது பிச்சவாரம் அலையாத்தி காடுகளிலும் நடராஜர் கோயில் நந்தவனபகுதியில் மட்டும் உள்ளது. இது கோயிலின் தலவிருட்ஷம். இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிச்சவாரம் பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளிலுள்ள தில்லைமரங்கள் அழிந்துவிடும். எனவே தான் அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து தில்லை மரக்கிளைகளை தட்டில் வைத்து நடராஜரே உன் தலவிருட்ஷத்தை காத்துகொள் என்று கோயிலின் கருவறையில் பூஜை செய்ய கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம். இதுமட்டுமில்ல இந்த திட்டம் நிறைவேற்றினால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதரத்தை இழக்கும் நிலை ஏற்படும். எனவே விவசாயிகள், விவசாய சங்கங்கள்,பொதுமக்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் எந்த வித்தியசம் இல்லாமல் ஒருங்கிணைந்து போரடவேண்டும்  என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

படகு கவிழ்ந்து மீனவர் பலி; இருவர் மருத்துவமனையில் அனுமதி

Published on 31/12/2023 | Edited on 01/01/2024
Fisherman incident after boat capsizes Two were hospitalized

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை புதுகுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயசீலன் (வயது 42), அமுது (வயது 48), சக்திவேல் (வயது 50) ஆகிய 3 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பரங்கிப்பேட்டை கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்துள்ளது. இதில் அமுது, சக்திவேல் ஆகிய இருவரும் கடலில் நீந்தி காயங்களுடன் கரைக்கு வந்துள்ளனர். இதில் ஜெயசீலன் மாயமாகியுள்ளார். மேலும் கரைக்கு வந்தவர்களை மீட்டு சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் படகு கவிழ்ந்து காணாமல் போன ஜெயசீலன் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீனவர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் தேடும் பணியில் கடந்த 2  நாட்களாக ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று (31.102023) சின்ன வாய்க்கால் கடற்கரை ஓரமாக இவரது உடல் கரை ஒதுங்கி உள்ளது. இதனை மீட்டு பரங்கிப்பேட்டை காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த மீனவர் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, சிபிஎம் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்க பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் சந்தானராஜ், நிர்வாகி பழனி, சுந்தர், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஆகாஷ் உள்ளிட்டவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் குறித்து எஸ்.ஜி ரமேஷ்பாபு தெரிவிக்கையில், “உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கும், காயத்துடன் உயிர் தப்பியவர்களுக்கும், படகு சேதமடைந்ததற்கு நிவராணம் வழங்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

ஆய்வகத்தில் இருந்த அமிலத்தால் பள்ளி மாணவருக்கு நேர்ந்த விபரீதம்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

cuddalore chidambaram aided school student lab incident he admitted in icu 

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அப்துல் சத்தார் மகன் முகமது பாரூக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது பள்ளி வகுப்பறையில் மின்விசிறி பழுதானதால் ஆசிரியர் மாணவர்களை அருகில் உள்ள ஆய்வகத்தில் அமர வைத்துள்ளார். அப்போது மாணவன் தொடையில் ஏதோ அமிலம் பட்டு அரிப்பதாகக் கூறியுள்ளார். அதற்கு ஆசிரியர் ஒருவர் மாணவனைத் தண்ணீர் ஊற்றிக் கழுவி விட்டு வரக் கூறியுள்ளார்.

 

இதை தொடர்ந்து அவர் வகுப்பில் இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்றபோது மாலை 6 மணிக்கு வீட்டில் மயங்கி விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது உடனடியாக மாணவனை சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவனின் உடலில் பட்ட அமிலமானது சுவாசத்தின் மூலம் ரத்தத்தில் கலந்துள்ளதாகத் தெரிவித்ததோடு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகப் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

 

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் கூறுகையில், "மாணவன் வகுப்பறையில் அமிலம் பட்டு எரிச்சல் ஏற்பட்டுள்ளது எனக் கூறியவுடன் ஆசிரியர் தண்ணீரைக் கொண்டு கழுவி விட்டு வரக் கூறியுள்ளார். பின்னர் மாணவனும் கழுவி விட்டு, தொடர்ந்து இரண்டு பாட வகுப்புகளைக் கவனித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்த தகவல் கேள்விப்பட்டு பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் 2 நாட்களாக மருத்துவமனையில் உள்ளோம்" என்றார்.

 

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் கடலூர் மண்டல செயலாளருமான ஹமீத் பரோஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளியில் சரியான பராமரிப்பு செய்யப்படுகிறதா எனக் கவனம் செலுத்தாத நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே இந்த சம்பவத்திற்கு காரணம். மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிருக்குப் போராடி வரும் மாணவனின் உயிரைக் காப்பாற்ற உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.