Skip to main content

ஊரடங்கை தளர்த்த மத்திய அரசு எடுத்த முடிவு! வற்புறுத்தவேண்டாம் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை!!!

Published on 19/04/2020 | Edited on 19/04/2020

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1,372ஆக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Corona Lockdown - Trichy Factory issue



ஊரடங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதால், ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் ஊரடங்கை தளா்த்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி, ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடித்து ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக திருச்சியில் துப்பாக்கி ஆலை, எச்.ஏ.பி.பி. ஆலை ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இயங்க உள்ள நிலையில், பணிக்கு வர வற்புறுத்தவேண்டாம் என்று பாதுகாப்புத்துறை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.  

 

சார்ந்த செய்திகள்