Skip to main content

கொரோனாவை  விரட்டக் கோவையில் ஆவி பிடிக்கும் குடும்ப பெண்கள்

Published on 01/04/2020 | Edited on 01/04/2020


கொரோனா   தொற்று   நோய்   வந்தாலும்   வந்தது , அதிலிருந்து     தங்களைத் தற்காத்துக் கொள்ள ஆளாளுக்கு ஒரு வழி முறைகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டனர். 
 

k


அலோபதி மருத்துவம் கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்க முயன்று கொண்டிருக்கிறது. பாராம்பரியமான சித்த மருத்துவத்தில் தற்போது 'கபசுர' குடி நீர் குடித்தால் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் எனச் சொல்லப்பட, கோவை உட்பட பல மாவட்டங்களில் 'கபசுர' குடி நீர் வாங்குவதில் மக்களிடையே போட்டா போட்டியே நடக்க ஆரம்பித்து விட்டது.
 

இப்போது 100 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது 'கபசுர' குடி நீர். இந்த நிலையில், சாம்பிராணி பொடியின் ஆவி பிடிப்பதின் மூலம் கொரோனா நோய்த் தாக்காது என்று சிலர் சொல்ல, மாலை 6 மணியில் இருந்து மூக்கு, வாய் வழியாக சாம்பிராணி ஆவி பிடிப்பதின் மூலம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்..என்கிற புதிய நம்பிக்கை கோவை மக்களிடையே பரவ ஆரம்பித்து இருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்