Skip to main content

புதுக்கோட்டையில் விமான விபத்து என்று வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

Published on 14/06/2020 | Edited on 14/06/2020
 Complaint seeking action against a rumor in Pudukkottai

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் தாலுகா மேலவசந்தனூர் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அங்குள்ள கண்மாயில் பயங்கர சத்தத்துடன் குட்டி விமானம் ஒன்று விழுந்து தீ பற்றி எரிவதாக காட்டுத் தீயை போல தகவல்கள் பரவியது. அத்துடன் 11 வினாடிகள் ஓடும் வீடியோ ஒன்றும், ஒரு விமானம் உடைந்து கிடப்பது போன்ற சில படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது.


இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்த உள்ளூர் இளைஞர்கள் மூலம் விமானம் விழவில்லை. விமான உதிரிப் பாகங்களும் இல்லை என்பதையும் ஆனால் பயங்கர சத்தம் எழுந்தது. அதன் பிறகு கண்மாயில் கருகிய புல், கருவேல மரங்கள் ஆங்காங்கே தீ பற்றி எரிந்தது என்பதை உறுதி செய்து நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டோம்.

அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் விமான விபத்து ஏதும் நடக்கவில்லை. வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் பேட்டியளித்தார். இந்த நிலையில்தான் கண்மாயில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிய தீயணைப்பு துறையினர் பார்வையிட்டனர். தொடர்ந்து புதுக்கோட்டை தடயவியல் சோதனை அதிகாரிகள் வந்து எரிந்து கிடந்த பல பகுதிகளில் இருந்து சாம்பல்களை சோதனைக்காக சேகரித்துள்ளனர். மேலும் அரசு அதிகாரிகள் அந்தப் பகுதி முழுவதும் சோதனை செய்து விமானத்தின் எந்த பாகமும் கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்தனர்.

 

 


இந்த நிலையில் முதன் முதலில் விபத்திற்குள்ளான விமானத்தின் பாகங்கள் கண்மாயில் உடைந்து கிடப்பதைப் போன்று பழைய விமான விபத்து படத்தை வெளியிட்டவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் ஆவுடையார்கோயில் தாசில்தார் மார்டின் லூதர்கிங். அறிவுறுத்தல்படி களபம் கிராம நிர்வாக அலுவுலர் சதீஷ்குமார் திருப்புணவாசன் காவல் நிலையத்தில்  வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்று பதிவு செய்த போலிஸார் உடனடியாக அந்த மனுவை சைபர் கிரைம்க்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்னும் சில நாட்களில், சமூக வலைதளங்களில் உடைந்த விமானம் படம் வெளியிட்ட நபரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'நான் கடவுள்' - மயானமான ஆன்மீக சொற்பொழிவு மைதானம்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
'I am God' - Mystical Spiritual Discourse by Boleh Baba

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க பல்லாயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காக கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்துள்ளனர். இந்த சிக்கி குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

'I am God' - Mystical Spiritual Discourse by Boleh Baba

அண்மைய தகவலாக ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. 18 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நெரிசலில் சிக்கி இறந்தவர்களில் அதிகப்படியானோர் பெண்கள், குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. சொற்பொழிவு நடத்தப்பட்ட இடம் மயானம் போல் காட்சியளிக்கிறது. 80 ஆயிரம் பேர் மட்டுமே இருக்க வேண்டிய இடத்தில் சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான மக்களை ஒரே இடத்தில் அடைத்து வைக்க முயன்றுள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். சொற்பொழிவு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில்தான் போலெ பாபா அண்மையில் குடியேறி வசித்து வந்துள்ளார்.

'I am God' - Mystical Spiritual Discourse by Boleh Baba

போலெ பாபா சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. போலீஸ் அதிகாரியாக இருந்து பின்னர் சாமியாராக மாறிய போலெ பாபா ஏற்கனவே கொரோனா காலத்தில் அரசு நிறைய தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்த பொழுதும் கூட 50,000 பேரை சொற்பொழிவிற்காக வாங்க என அழைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். சில இந்து கடவுள்களின் பெயர்களைக் குறிப்பிட்டு 'நான் அவருடைய வழித்தோன்றல்; அவருடைய மறுபிறவி என்னிடம் வந்து தகவலை கேட்டு ஆசிபெற்றுக் கொண்டால் உங்களுக்கு நல்லது நடக்கும்' என்று சொல்லி தான் மக்களை சொற்பொழிவு கூட்டத்திற்கு சேர்த்துள்ளார் போலெ பாபா. ஆனால் தற்பொழுது வரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய நபரான போலெ பாபா மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறுபுறம் போலே பாபா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள போலெ பாபாவை தேடிவருகிறோம் எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக்கொலை; இறந்த பின்னும் முகத்தை சிதைத்த கொடூரம்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Notorious rowdy attacked in the middle of the road; The brutality that disfigured the face even after lose their live

பிரபல ரவுடி நடுரோட்டில் சரமாரி வெட்டிக்கொலைசெய்யப்பட்டதோடு இறந்த பின்னும் அவரின் முகத்தை சிதைத்த கொடூர சம்பவம் வேலூரில் நிகழ்ந்துள்ளது.

வேலூர் அடுத்த அரியூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான எம்.எல்.ஏ. ராஜா (எ) ராஜ்குமார் (42). இவர் மீது பல்வேறு கொலை, வழிப்பறி, கடத்தல் போன்ற வழக்குகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று (02.07.2024) இரவு  ரவுடி ராஜா அரியூர் மெயின் ரோட்டில் உள்ள டீக்கடையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அம்பேத்கர் சிலை அருகே சென்றபோது எதிரே காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளனர்.

இதில் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்த ரவுடி ராஜாவை காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் வீச்சரிவாள்களால் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத கும்பல் ராஜாவின் முகத்தை சரமாரியாக வெட்டியதில் அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைந்தது. பின்னர் கொலை கும்பல் ஒரு வீச்சு அரிவாளை அங்கேயே போட்டுவிட்டு அவர்கள் வந்த காரில் தப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியூர் காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். படுகொலை செய்யப்பட்ட ரவுடி ராஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

கொலை செய்துவிட்டு காரில் தப்பி சென்ற கும்பலை உடனே பிடிக்கும்படி போலீசாருக்கு எஸ்.பி உத்தரவிட்டார். இதையடுத்து டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதோடு கொலை நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்யும் பணியையும் தொடங்கினர்.

இதற்கிடையே காரில் தப்பிச்சென்ற கொலை கும்பலை வேலூர் வல்லம் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்பாவிதத்தை தடுக்க காவல்துறை குவிக்கப்பட்டதால் அரியூர் பகுதியில் நள்ளிரவில் பரபரப்பாக காணப்பட்டது.

Notorious rowdy attacked in the middle of the road; The brutality that disfigured the face even after lose their live


இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

அரியூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி ராஜா என்கின்ற எம்.எல்.ஏ ராஜா மீது 3 கொலை வழக்குகள் மற்றும் 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவருக்கு திருமணம் நடந்து 3 குழந்தைகள் உள்ளன. வழக்கம்போல டீக்கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது காரில் வந்த ஒரு கும்பல் திடீரென காரை ராஜா மீது மோதி ராஜாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியோடியுள்ளனர். அவர்களை கைது செய்து, காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

முதல்கட்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் அரியூர் பகுதியைச் சேர்ந்த சந்துரு, அஜித் குமார், ராஜேஷ், தேஜேஷ் என்பதும், இவர்களுக்கும் ரவுடி எம்எல்ஏ ராஜாவுக்கும் இடையே ஏற்கனவே நடந்த கொலைகள் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது தெரியவந்தது. இதில் பழிதீர்த்து கொள்ளவும், ஏரியாவில் யார் பெரியவர் என்பதிலும் அவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நடந்த வாக்குவாதத்தில், ‘உங்களை நான் கொலை செய்யாமல் விடமாட்டேன்’ என்று ரவுடி ராஜா கூறியதாக தெரிகிறது. இதனால் நம்மை கொலை செய்வதற்கு முன்பு நாம் அவரை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளனர். பிடிபட்டுள்ள 4 பேர் மீதும் ஏற்கனவே எதாவது வழக்குகள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனக் கூறினர்.