Skip to main content

மணல் கடத்திய ஒன்றிய செயலாளர்? - மன்னித்து விட்ட எஸ்.பி 

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

Complaint regarding sand smuggling in Vellore

 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் அனுமதி பெறாமல் மணல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்றை பிப்ரவரி 23 ஆம் தேதி மாலை போலீசார் பிடித்துள்ளனர். அந்த லாரி அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆளும்கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் என்பவரின் லாரி எனக் கூறப்படுகிறது.

 

சென்னை டூ பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் அடுத்த செதுவாளை அருகே அடிக்கடி விபத்து நடக்கிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவுக்கு புகார் சென்றதன் பேரில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ளனர். அப்போது ராங் ரூட்டில் ஒரு லாரி வந்துள்ளது. அந்த லாரியை மடக்கிப் பிடித்துள்ளனர். அந்த லாரியில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மணல் இருந்துள்ளது. மணல் ஏற்றிச் செல்ல முறையான ஆவணங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அந்த லாரியை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளார் எஸ்.பி.

 

ஆளும்கட்சி பிரமுகரின் லாரி மணல் கடத்தலில் சிக்கி போலீஸ் வழக்கு போட்டது என்றால் எதிர்க்கட்சிகள் இதனை வைத்து அரசியல் செய்யும், ஆளும்கட்சிக்கு அவப்பெயராகிவிடும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவிடம் ஆளும்கட்சி பிரமுகர்கள் சிலர் தொடர்புகொண்டு வழக்கு போட வேண்டாம் எனப் பேசியுள்ளனர். அதனை அவர் ஒப்புக்கொள்ளவில்லையாம்., வழக்கு போடப்படும் எனக் கூறியுள்ளார். இறுதியில் தொகுதி எம்.எல்.ஏவும் திமுக மா.செவுமான நந்தகுமாரே, எஸ்.பியை தொடர்புகொண்டு வழக்கு போடாதீர்கள் என கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மணல் கடத்திய ஒ.செ லாரியை போலீசார் விடுவித்துள்ளனர். 

 

ஏற்கனவே பாலாற்று மணல் கொள்ளை தீவிரமாக நடக்கிறது. அதனை தடுக்காமல் காவல்துறை தூங்குகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் மணல் திருடிய லாரியை பிடித்து மீண்டும்  விடுவித்தது சரியா என விவசாய சங்கத்தினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

இது குறித்து எம்.எல்.ஏ நந்தகுமாரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, “தவறான தகவல். எஸ்.பி ஆய்வு செய்துகொண்டு இருந்தபோது ராங் சைடில் லாரி வந்துள்ளது. அதனால் அதனை பிடித்து வழக்கு போடச் சொல்லியுள்ளார். இது பற்றி என்னிடம் கூறினார்கள். தவறுதலாக வந்திருப்பார்; இந்த ஒருமுறை மன்னித்துவிட முடியுமா எனக் கேட்டேன். அவரும் மன்னித்து விட்டுள்ளார். லாரியில் மணல் இருந்ததாகத் தகவல் பரவியுள்ளது. அது உண்மையல்ல” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.