Skip to main content

பதக்கம் வென்ற சிறுவர்களை பாராட்டிய ஊ.மன்ற தலைவர்!

Published on 30/01/2022 | Edited on 30/01/2022

 

jkl

 

சிதம்பரம் ஊராட்சி சிவசக்திநகரில் குத்துசண்டை போல் கும்பூ தற்காப்பு கலையின் ஒருபிரிவான  உஷூ தற்காப்பு கலையை 22 சிறுவயது மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.  இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் சிதம்பரத்தில் மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிதம்பரம் பகுதியில் உஷூ தற்காப்பு கலையில் பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாநில அளவில் 17 பேர் வெற்றி பெற்றவர்கள்.
 


இதனைதொடர்ந்து  மாநில  அளவிலான  18-வது உஷு போட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  கடந்த 27,28 தேதிகளில் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற 17 பேரும் கலந்துகொண்டனர்.  அதில்  29 கிலோ எடை பிரிவில் சிதம்பரம் ராமசாமி அரசு பள்ளி மாணவி செஹனாஸ் பாத்திமா தங்கம் பதக்கமும், 60 கிலோ எடை பிரிவில் புஞ்ச மகத்து வாழ்க்கை அரசு நடுநிலைப் பள்ளி  8-ம் வகுப்பு மாணவி சிவசர்மிலி வெள்ளி பதக்கமும், 32 கிலோ எடை பிரிவில் சிதம்பரம் நகராட்சி துவக்க பள்ளி 5-ம் வகுப்பு மாணவி பிரவினா வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளனர்.

 

மேலும் இப்போட்டியில் கடலூர் மாவட்டம் முதல் முறையாக தங்கம், வெள்ளி, வெங்கல பதக்கம் வென்று  சாதனை படைத்துள்ளது. இதனையறிந்த சிதம்பரம் நான்முனிசிபல் ஊராட்சி மன்ற தலைவர் பத்மசுந்தரி உமாநாத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உமாநாத் ஆகியோர் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு சந்தனமாலை மற்றும் சால்வை அனிவித்து கவுரவித்து மேலும் பல்வேறு விருதுகளை வாங்க வேண்டும் என வாழ்த்தினார்கள். 

 

இது வெற்றிபெற்ற மாணவிகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்வில் உஷூ தற்காப்பு கலையில் பயிற்சியாளர் சந்தன்ராஜ், செயலாளர் ரமேஷ். மாணவிகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இதில் வெற்றிபெற்ற இவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்வார்கள். அதில் தகுதி பெறுபவர்கள் உலகளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொண்டு உலக சாதனையாளர் விருதை பெறுவார்கள் என பயிற்சியாளர் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.
 

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.