Skip to main content

தங்கையை காப்பாற்ற முயன்ற அண்ணன்... சடலத்தை சுமந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர்!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

Brother, sister passed away ... Assistant police inspector carrying the body

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கைலாசகிரி பகுதியில் வசித்துவருபவர் லோகேஸ்வரன். அவரது மனைவி மீனாட்சி. இந்த தம்பதியினர் கைலாசகிரி மலைப்பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்றுள்ளனர். தங்களுடன் அவர்களது குழந்தைகளான  9 வயது ஜஸ்வந்த், 7 வயது பிரீத்தாவையும் அழைத்துச் சென்றிருந்தனர். மலைப்பகுதிக்குச் சென்ற லோகேஸ்வரன், அங்குள்ள பாறையின் மீது அமர்ந்து ஓய்வெடுத்துள்ளார். அப்போது அருகில் அவரது மனைவியும் இருந்துள்ளார். அவர்களது மகன் ஜஸ்வந்த் மற்றும் மகள் பிரீத்தா ஆகியோர் அங்குள்ள குளத்தில் மீன் பிடித்தபடி விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பிரீத்தா குளத்து நீருக்குள் வழுக்கி விழுந்துள்ளார்.

 

தங்கையைக் காப்பாற்ற அண்ணன் ஜஸ்வந்த் முயற்சித்துள்ளார். அந்தச் சிறுவனாலும் முடியாமல் இருவரும் குளத்தில் மூழ்கியுள்ளனர். அவர்களின் சத்தத்தைக் கேட்ட அவர்களது தந்தை லோகேஸ்வரன் ஓடிச்சென்று குளத்தில் குதித்து குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லையாம். உதவிக்கு கூட யாருமில்லாததால் போலீசாருக்குத் தகவல் தந்துள்ளனர். அந்த தகவலின் பேரில் உமராபாத் காவல்துறையினர், ஆம்பூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் குளத்தில் மூழ்கிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு, சுமார் 1 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு ஜஸ்வந்த் மற்றும் ஹரி ப்ரீத்தா இருவரையும் சடலமாக மீட்டனர்.

 

Brother, sister passed away ... Assistant police inspector carrying the body

 

மலைப்பகுதியிலிருந்து சடலத்தை எடுத்து வருவதற்கு யாரும் இல்லாததால், காவல் உதவி ஆய்வாளர் காந்தி, பிரீத்தா உடலை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் தோள் மீது சுமந்து வந்து ஆம்புலன்சில் ஏற்றிவைத்தார். மற்றொரு சடலத்தைக் காவலர்களும் அங்குள்ள சிலரும் டோலி கட்டி தூக்கி வந்தனர். இரண்டு சடலங்களையும் கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குடிநீரில் கழிவுநீர் கலந்து சிறுவன் உயிரிழப்பு; சென்னை மாநகராட்சி விளக்கம்

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Boy lose their live after drinking water mixed with sewage; Description of Corporation

சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை அபீத் காலனி பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததாக 11 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிறுவனின் சகோதரியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியின் துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட தண்ணீரை பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்ற வருகிறது. துர்நாற்றத்துடன் குடிநீர் வருவதாக ஏற்கனவே அந்த பகுதி மக்கள்  புகார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 11 வயது சிறுவன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் சென்னை மாநகராட்சி இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மழைநீர் செல்வதற்கு இடையூறாக சுவர் கட்டியதால் குடிநீரில் கழிவுநீர் கலந்தது தெரியவந்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீர் செல்வதற்கு இடையூறாக சுவர் கட்டப்பட்டதால் கழிவுநீர் செல்வது தடுக்கப்பட்டு அருகே உள்ள வளாகத்தின்  கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கழிவு நீர் கலந்துள்ளது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மனைவியை கத்தியால் குத்திய கணவன்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Husband stabs wife in Tiruppathur

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலப்பட்டு அடுத்த கல்லுகுட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாசம் மகன் பிரவீன் (32). இவர் சென்னையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகள் நந்தினி (28) என்பவருக்கும் பிரவீனுக்கும் திருமணம் நடைபெற்று குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கணவனிடமிருந்து பிரிந்து நந்தினி தனது அம்மா வீட்டில் தங்கி திருப்பத்தூர் அருகே புதுப்பேட்டையில் இயங்கும் ஸ்ரீராம் பைனான்ஸில் டாக்குமெண்ட் ஸ்டாப்பாக வேலையும் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கணவன் பலமுறை தனது மனைவியை தன்னுடன் வாழ அழைத்தும் வராத காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பிரவீன், மனைவி வேலை செய்யும் இடத்திற்கே சென்று தனது மனைவியை தனியாக அழைத்து தன்னிடம் வர அழைத்துள்ளார். ஆனால், மனைவி வர மறுத்து அவமானப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமானவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மனைவின் உடம்பில் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார். இதனால் மனைவி அலறி உள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு நந்தினியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தன் மனைவியை குத்தியதால் கணவன் பிரவீனுக்கும் கையில் காயம் ஏற்பட்டதால் அங்கேயே அமர்ந்திருந்தார். இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் பிரவினை அழைத்து வந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளித்தனர். கருத்து வேறுபாடு காரணத்தால் கணவன் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.