Skip to main content

கவின் கேட்ட கேள்வியால் கடுப்பாகி வெளியேறிய ஷெரின்!

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் இந்தவாரம் எவிக்சன் லிஸ்டில் உள்ளனர். 

  big boss



மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் டாஸ்க்குகளில் எந்த போட்டியாளர் வெற்றி பெறுகிறரோ அவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார் என்றும் பிக் பாஸ்ஸில் கூறியுள்ளனர். இந்த டாஸ்க்குகளில் தர்ஷன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இந்த நிலையில் இன்று வந்த ப்ரோமோ வீடியோவில் ஷெரினுக்கும், கவினுக்கும் இடையே பிரச்னை ஏற்படுவது போல் வந்துள்ளது. அதில், இன்று போட்டியாளர்களுக்கு வழக்கம் போல் ஒரு டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளனர். அப்போது கவின் டாஸ்க்கை செய்யாமல் லாஸ்லியாவுடன் பேசி கொண்டிருக்கிறார். இதனால் எரிச்சலான ஷெரின் கொடுத்த டாஸ்க்கை பற்றி கவினிடம் கேட்டுள்ளார். அதற்கு கவின், எல்லாரும் என்ன நியாயமா விளையாடிட்டிங்க என கேட்க ஷெரின் கோபத்துடன் தன் முன் இருந்த பேஸ்கட்டை உடைத்து தள்ளி விட்டு டாஸ்க்கை விட்டு வெளியேறி வீட்டிற்குள் சென்று விடுகிறார். 
 

சார்ந்த செய்திகள்