Skip to main content

விநாயகர் கோவிலில் மணியடிக்கும் காகம்; வினோத நிகழ்வால் அதிசயிக்கும் மக்கள்

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

A bell-ringing crow in the Ganesha temple; People marveling at the strange phenomenon

 

தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையிலிருந்து குண்டாறு அணைக்குச் செல்கிற வழியில் இருக்கிறது இரட்டைக்குளம் கிராமம். இதன் கரையில் அமைந்துள்ள சிறிய சக்தி விநாயகர் கோவிலில் புதன் மற்றும் சனிக்கிழமை இரண்டு நாட்களில் மட்டும் காலை மாலை என்று இரு வேளைகளிலும் பூஜை நடக்கிறது. இந்த நாட்கள் தவிர்த்து வாரத்தின் 5 நாட்களிலும் அந்தக் காட்டுப் பகுதியின் காகம் ஒன்று காலை 7 மணிக்கும் மாலை 5 மணிக்கும் வந்து கோவிலின் முன்பு உள்ள மணியை சுமார் 5 நிமிடம் பூஜையாக அடித்துவிட்டுச் செல்கிறது. இந்த சம்பவம் கடந்த மூன்று மாதமாக தினமும் வாடிக்கையாகவே நடந்து வருகிறது. நேரம் தவறாமல் காகம் வந்து விநாயகருக்கு மணியடிக்கிறது.

 

A bell-ringing crow in the Ganesha temple; People marveling at the strange phenomenon

 

பக்தியால் விநாயகருக்கு காகம் இருவேளையும் மணியடித்துவிட்டுச் செல்கிறதாக இந்த சம்பவத்தைக் கவனித்துவிட்ட அந்தப் பகுதியில் டீ கடை நடத்தி வருகிற சசிகுமார் அதிசயம் மேலிட, ''இதை நாங்கள் உன்னிப்பாக கவனிக்காமலிருந்தோம். சக்தி விநாயகர் கோவிலில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பூஜை நடப்பதால் அன்றைய தினம் மட்டும் காகம் வராது. தற்செயலாக கவனித்துவிட்ட நாங்கள் தொடர்ந்து கவனித்த போது தான் பூஜை நாட்கள் தவிர்த்து மற்ற 5 நாட்களும் தவறாது காலை மாலை வந்து காகம் மணியடித்துவிட்டுச் செல்வதைக் கவனித்தோம். எங்களுக்கு ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருக்கு. மூன்று மாதமாக ஒரு பறவை இறை பக்தியால் மணியடித்து விட்டுச் செல்வதை இந்தப் பகுதி மக்கள் கூட்டமாக வந்து அதிசய காகத்தைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.