Skip to main content

தாலிக்கு நீதி கேட்டு மனைவியின் தாலியை அணிந்து போராடும் அறிஞர்

Published on 30/12/2018 | Edited on 31/12/2018
t

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள எருக்கலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அறிஞர். அவரது மனைவி பரிமளா.   கடந்த 27 ந் தேதி பரிமளா தவிடு விற்ற பணம் வாங்கச் சென்ற போது அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் பரிமளாவை தாக்கி தாலியை பறித்து கீழே போட்டுள்ளனர். இது குறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் தான் இன்று ஞாயிற்றுக் கிழமை எருக்கலக்கோட்டை கடைவீதியில் ஒரு பதாகையை கட்டிவிட்டு தனது மனைவியின் தாலியை தன் கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


  ஏன் இந்த போராட்டம் என்றால் அருகில் உள்ள பதாகையை காட்டுகிறார். அதில் தாலியை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.  அதனால் தாலி அணிய மறுக்கிறார் பரிமளா என்று எழுதப்பட்டிருந்தது.


  தாலிக்கு நீதி கேட்டு மனைவியின் தாலியை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரில் சென்ற ரவுடியை மடக்கிய மர்ம கும்பல்... அரிவாளால் சரமாரி வெட்டி கொலை!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

Rowdy passes away near thali.. police investigating

 

தளி அருகே, காரில் சென்ற ரவுடியை மடக்கிய மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள கும்மளாபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் உதயகுமார் (30), ரவுடி. இவர் மீது தேன்கனிக்கோட்டை காவல் நிலையம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் ஒரு காவல் நிலையம் என மொத்தம் இரு காவல் நிலையங்களில் 3 கொலை வழக்குகள் விசாரணையில் உள்ளன. 

 

ஏற்கனவே இவர் ஒருமுறை குண்டர் சட்டத்திலும் சிறைக்குச் சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் (ஜூன் 29) இரவு, உதயகுமார் காரில் கும்மளாபுரத்தில் உள்ள கவுரம்மா கோயில் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம கும்பல் காரை வழிமறித்தது. ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் தன்னைச் சுற்றிவிட்டதை உணர்ந்த உதயகுமார், திடீரென்று காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். ஆனாலும் விடாமல் துரத்திச்சென்ற மர்ம நபர்கள், உதயகுமாரின் பின் கழுத்து, தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். 

 

கொலை திட்டத்தை நிறைவேற்றிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. கிருத்திகா, தளி காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலம், உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 

கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. எனினும், கொலையுண்ட ரவுடி உதயகுமாரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது பழிக்குப் பழியாக இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள், கொலையுண்ட உதயகுமாரின் செல்ஃபோனுக்கு கடந்த ஒரு வாரமாக வந்த மற்றும் அவர் பேசிய செல்ஃபோன் எண்களின் தரவுகளைச் சேகரித்து விசாரணை நடத்திவருகின்றனர்.


கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, மது போதையில் தளி அருகே மதகொண்டப்பள்ளியில் இளைஞர் ஒருவர் மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே காவல் நிலைய சரகத்தில் ரவுடி கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

கட்சி சின்னத்தில் கல்யாண தாலி! - அதிசய கிராமம்!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

dddd

 

தமிழர்கள் ஆதிகாலத்தில், பனை ஓலையைத் தாலியாகக் கட்டினார்கள் என்று சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. பின்னர், அது மஞ்சள் கயிறாக மாறியது. காலப்போக்கில் தங்கத்தாலி வழக்கத்துக்கு வர, அதில் தங்கள் குலதெய்வங்களின் படத்தைப் பொறித்தார்கள். அது இப்போது குலம், கோத்திரம் என்று பல்வேறு வடிவங்களில், பெண்களின் கழுத்தில், இதயத்துக்கு நெருக்கமாகத் தொட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில்தான், கட்சி சின்னத்தையே தாலியாக கட்டும் அதிசய கிராமம் பற்றி தகவல் வர... விருத்தாசலத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில், உள்ள மு.பட்டி எனும் கிராமத்திற்குச் சென்றோம். அரசியல் விழிப்புணர்வும் கொள்கைப் பிடிப்பும் கொண்ட திராவிட கிராமமாகக் திகழும் மு.பட்டியில் உள்ள தி.மு.க.வினர், தங்கள் குடும்பத் திருமணங்களில், உதயசூரியன் சின்னத்தைத் தாலியில் பொறித்துக் கட்டுவதை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடித்து வருகிறார்களாம்.

 

dddd

 

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் திருமணம், விருத்தாசலத்தில் நடப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு, அங்கே சென்றோம். மு.பட்டி கருணாநிதி - கண்ணகி தம்பதியரின் மகன் வைகோவிற்கும், பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் - செந்தமிழ்ச்செல்வி தம்பதிகளின் மகள் இந்துமதிக்கும் விருத்தாசலத்தில் உள்ள சபிதா திருமண மண்டபத்தில் சுயமரியாதைத் திருமணம் நடந்துகொண்டிருந்தது. தி.மு.க.வின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான கணேசன் முன்னிலையில், திருச்சி சிவா எம்.பி. அந்த சீர்திருத்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். மணமகள் கழுத்தில் உதயசூரியன் தாலியை மணமகன் கட்டினார்.

 

தனது மகளின் புதுமனை புகுவிழாவில் தலைகாட்டிவிட்டு, இந்த சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்க வந்திருந்த திருச்சி சிவா வாழ்த்தும்போது, “பல ஆண்டுகளாக கொள்கைப் பிடிப்போடு உள்ள கிராமம் மு.பட்டி. மணமகனின் தாத்தா சுப்பிரமணியன் திராவிட முன்னேற்றக் கழகத்தை அங்கே வேர் ஊன்றச் செய்தவர். அவரது மகன்களும், அவரது பேரப் பிள்ளைகளும் அதே வழியில் சுயமரியாதைத் திருமணத்தை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து திராவிட உணர்வோடு திகழ்ந்து வருகிறார்கள். இவர்கள் குடும்பம் மட்டுமல்ல, அங்கே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பிடிப்புள்ள அனைத்து குடும்பத்திலும், இதே போன்ற சூரியத்தாலி திருமணங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது” என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

 

dddd

 

மணமகனின் தந்தை கருணாநிதியிடம் நாம் கேட்டபோது, “எனது அத்தை ராசாயாள் என்பவரைத் திட்டக்குடி அருகில் உள்ள தொ.செங்கமேடு கிராமத்தில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். அப்போது எனது தந்தை சுப்பிரமணின் அடிக்கடி தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுவருவார். அங்கேயே சில நாட்கள் தங்கி அங்குள்ள விவசாய வேலைகளைக் கவனிப்பார். 1952-ஆம் ஆண்டு அந்த ஊரைச் சேர்ந்த தொ.பிச்சமுத்து என்பவர், அந்த ஊரில் திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கியதோடு, பல்வேறு கிராமங்களிலும் கட்சியைத் துவக்கினார். அதன் காரணமாக அவர் விருத்தாசலம் வட்டச் செயலாளராக பதவி வகித்தார். அவர் கலைஞரையும், கவிஞர் கண்ணதாசனையும் அந்த ஊருக்கு அழைத்துவந்து கூட்டம் நடத்தினார். அப்போதெல்லாம் பஸ் வசதி இல்லாத காலம். திட்டக்குடியில் இருந்து கட்டைவண்டியில் கலைஞரை அழைத்து வந்ததாக என் தந்தை கூறியுள்ளார். கலைஞரின் தமிழ் அவருக்குள் உணர்வை ஊட்டியது. ஊருக்குத் திரும்பியதும், முதல் வேலையாக எங்கள் ஊரில் தி.மு.க. கொடியை ஏற்றி, திண்ணைப் பிரச்சாரம் செய்தார்.

dddd

                                                                         கருணாநிதி

 

அவரது சமகால நண்பர்களோடு பல்வேறு கிராமங்களுக்கும் சென்று கட்சிக் கொடியேற்றி, கிளைக் கழகங்களை உருவாக்கினார். அந்த திராவிட உணர்வு எங்கள் ரத்தத்திலும், நாடி நரம்புகளிலும் கலந்துள்ளது. எனது அண்ணன்கள் செங்குட்டுவன், அறிவழகன், மூன்றாவது பிள்ளை கருணாநிதியாகிய நான், நான்காவதாக தம்பி ராஜேந்திரன் என எங்களின் பெயர்களைக் கூட, அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னோடிகளின் பெயராகவே சூட்டினார். 2016-ல் அவர் மரணமடையும் வரை தி.மு.க.தான் உயிர்மூச்சு'' என்று மலரும் நினைவுகளில் மூழ்கினார்.
 

dddd

                                                                       சுப்பிரமணியன்

 

அவரே தொடர்ந்து, “நான்காவது தலைமுறையாக சூரியத் தாலி திருமணத்தை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். அந்தத் தாலியில் திருமணத் தேதியும் இருக்கும். எங்கள் கிராமத்தில் எல்லோரும் வைதீகத் திருமணத்துக்கு இடம் கொடுக்காமல் சீர்திருத்தத் திருமணத்தையே கடைப்பிடிக்கிறோம். குழந்தைகளுக்கும் திராவிடத் தலைவர்களின் பெயர்களையே சூட்டுகிறோம். அந்த வகையில் இது முன்னோடி திராவிடக் கிராமம்’’ என்றார் உற்சாகமாக.

 

ஒரு தொண்டன், தான் சார்ந்துள்ள கட்சியின் கொள்கைப் பிடிப்பில் எந்த அளவிற்கு உள்ளான் என்பதற்கு உதாரணமாக, திருமணத்திற்கு வருகை தந்த மு.பட்டியைச் சேர்ந்த சிலர், ஒரு சம்பவத்தைக் கூறினார்கள். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது விருத்தாசலம் தொகுதியில் நிறுத்தப்பட்ட திமுக வேட்பாளர், விருத்தாசலம் நகரில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கினார். 

 

அப்போது மாவட்ட இலக்கிய அணி பொறுப்பில் இருந்தவர் வேட்பாளருக்கு சால்வை அணிவித்ததோடு, அவரோடு தேர்தல் பிரச்சாரத்திற்குப் புறப்பட்டார். அதைப் பார்த்தப் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அவரது தந்தை இறந்துபோய் சடலமாக வீட்டில் படுத்திருக்க, தான் சார்ந்துள்ள கட்சியின் வேட்பாளர் பிரச்சாரத்திற்கு வந்துள்ளாரே, தந்தையின் உடலை அடக்கம் செய்யாமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரலாமா? என்று கட்சியினர் அவரிடம் கேட்டுள்ளனர். 

 

அப்போது அவர் கண்கள் கலங்கியபடி கூறினார், “என் தந்தை 64 வருடமாக கலைஞரே என் உயிர்; கழகமே என் உடல் என்று வாழ்ந்தவர். அவர் இறப்பதற்கு முன்பு ‘கட்சிதான் முதலில், அதன் பிறகுதான் குடும்ப நிகழ்வுகள்’ என்று சொன்னவர். அவரது கொள்கையைக் கடைபிடிக்கும் நோக்கத்தில்தான் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள வந்தேன். இனி ஊருக்குச் சென்று தந்தையின் இறுதி கடமைகளை செய்வேன். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய நிம்மதி இனி எனக்கு ஏற்படும்” என்றார். அவர்தான் மறைந்த சுப்பிரமணியனின் மகன், இங்கே மணமகனாக உள்ள வைகோவின் தந்தை கருணாநிதி என்றனர்.

 

திருமண அரங்கிலிருந்து கிளம்பும்போது “அழைக்கின்றார் அண்ணா...” என்ற நாகூர் ஹனீபாவின் பாடல் எங்கிருந்தோ காற்றில் மிதந்துவந்து மனதைத் தாலாட்டியது.