Skip to main content

மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்; தமிழக அரசு உத்தரவு

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Appointment of new District Collectors; Tamil Nadu Govt

 

கரூர், தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இது குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், “நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்த தங்கவேல், கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை பெருநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்பக் கல்வி ஆணையராக வீர ராகவ் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்