Skip to main content

மோடியை புறக்கணித்த அதிமுக வேட்பாளர்

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று கோவை வந்தார். இதில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர் அதேபோல் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சிபி.ராதாகிருஷ்ணன் உட்பட பொள்ளாச்சி, நீலகிரி,திருப்பூர், அரூர்,நாமக்கல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

 

election

 

ஆனால் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறன் கலந்துகொள்ளவில்லை. இதுபற்றி நாம் விசாரித்தபோது வெங்கு மணிமாறன் ஏற்கனவே திட்டமிட்டபடி மூலநூர் பகுதியில் வாக்கு சேகரிப்பதாக கூறப்பட்டது.ஆனாலும் பிரதமர் வந்திருந்தபோது கொங்கு மண்டலத்திலுள்ள மற்ற வேட்பாளர்கள் அந்த கூட்டத்தில் ஆஜராகி இருந்த நிலையில் ஈரோடு தொகுதி வேட்பாளர் கொங்கு வெங்கு மணிமாறன் மட்டும் கலந்துகொள்ளாதது ஏன் என்பது புரியவில்லை.

 

இது சம்பந்தமாக அதிமுக தரப்பிடம் விசாரித்தபோது ஈரோட்டில் ஜவுளி மற்றும் விவசாயம் சம்பந்தமாக மக்கள் பாதிப்புக்குள்ளான பல்வேறு நெருக்கடிகள் மத்திய பாஜக ஆட்சியில் தொடர்ந்து நடந்தது.இந்த நிலையில் மோடி கூட்டத்தில் கலந்துகொண்டால் மக்களிடம் கடுமையான எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டிவரும் என அதிமுக தரப்பு நினைத்ததால் வேட்பாளர் மணிமாறன் கோவையில் நடைபெற்ற மோடி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆக பிரதமர் மோடி கூட்டத்தில் அதிமுக வேட்பாளரே புறக்கணிப்பு செய்யும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.