Skip to main content

அ.தி.மு.க. பொதுக்குழு நடக்குமா?- சற்றுநேரத்தில் உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம்! 

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

admk Will there be a public meeting? - High Court issues order soon!

 

அ.தி.மு.க.வின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரும் மனு இன்று (22/06/2022) பிற்பகல் 04.00 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "எந்த உறுப்பினரும் பொதுக்குழுவில் குரல் எழுப்பலாம் என்பதற்கு விதிகளைக் காட்டுங்கள் பார்ப்போம்" என்றார். 

 

அதைத் தொடர்ந்து மனுதாரர்களான ராம்குமார், சுரேன் தரப்பு வழக்கறிஞர்கள், "கட்சி விதிகளில் தற்போதைய நிலையே பொதுக்குழுவுக்கு பின் நீடிக்க வேண்டும். கட்சியின் பொதுச்செயலாளர் என்பவர் அடிப்படை உறுப்பினர் அளவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர். கட்சித் தலைமை குறித்து பொதுக்குழுவில் திருத்தம் செய்ய ஈ.பி.எஸ். முடிவு செய்துவிட்டார்" எனத் தெரிவித்தனர். 

 

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை விட பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. விதிகளைத் திருத்த யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை. விதிகளைத் திருத்திய பின் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதும். சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் பொதுக்குழு கூட்டப்படுகிறது. அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கூடாது. பொதுக்குழுவுக்கு தடைக்கோரும் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. பொதுக்குழு முடிவைக் காக்கும் அறங்காவலர்களாகத்தான் பிற நிர்வாகிகள் செயல்பட முடியும். பொதுக்குழுவுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வரத் தொடங்கியுள்ளனர்" என்று வாதிட்டனர். 

 

அப்போது நீதிபதி, பொதுக்குழுவில் எந்த விவகாரத்தையாவது எழுப்புமாறு யாராவது கூறினால் என்ன செய்வது? என்று ஓ.பி.எஸ். தரப்புக்கு கேள்வி எழுப்பினார். 

 

இதற்கு பதிலளித்துள்ள ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர்கள், ஒரு விவகாரத்தை முன்மொழிவது என்பது வேறு, அதனை எழுப்புவது என்பது வேறு. ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் பொதுக்குழுவில் எந்த தீர்மானத்தையும் வைக்க முடியாது. என்னென்ன நடக்கவுள்ளது என்பதை அறிந்துக் கொண்டே பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க முடியும். ஏற்கனவே, அனுப்பிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து அனுப்பிவிட்டார். தீர்மானத்தில் புதிதாக எதாவது சேர்க்க வேண்டியிருந்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே முடிவெடுக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை நீக்க கட்சியில் விதி இல்லை. வெற்றிடம் ஏற்பட்டால் மட்டுமே மற்றொருவரை நியமிக்க முடியும். வேறு அஜெண்டா ஏதும் இருந்தால் இருவரும் சேர்ந்து தான் முடிவெடுக்க முடியும். கொடுத்த தீர்மானங்களைத் தவிர மற்ற தீர்மானங்களை நாளை கொண்டு வரக்கூடாது என வாதிட்டனர். 

 

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கூட்டம் நடத்தலாம், கட்சி விதிகளில் மட்டும் திருத்தும் செய்யக்கூடாது என மனுத்தாரர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்று கூறிய நீதிபதி, இடைக்கால உத்தரவுக்காக வழக்கை சிறுது நேரத்திற்கு ஒத்திவைத்துள்ளார். வழக்கு தொடர்பான உத்தரவு தயாரான பிறகு நீதிமன்ற அறையில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.