Skip to main content

போலி பணி நியமன ஆணை... வேலையில்லா இளைஞர்களை குறிவைக்கும் மோசடி நபர்கள்!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

Fake employment order ... Fraudsters targeting unemployed youth

 

விழுப்பும் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது கன்னலம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவரது மனைவி சாந்தி (53). இவரது மகன் அவினாஷ் படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து, செஞ்சி அருகே உள்ள பென்னகரத்தைச் சேர்ந்தவர் உத்தர குமார் (49). அவினாஷ், அவரது தாயார் சாந்தி ஆகிய இருவரையும் 2019ஆம் ஆண்டு சென்று சந்திதித்த உத்தர குமார் அவர்களிடம், புதுச்சேரியைச் சேர்ந்த வசந்த ராஜா என்பவரை எனக்குத் தெரியும் அவர் சென்னை விமான நிலையத்தில் பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார் என கூறியுள்ளார். அதேபோன்று உங்களது மகன் அவினாஷுக்கு வேலை வாங்கித் தர அவர் சம்மதித்துள்ளார். அந்த வேலை வாங்குவதற்காக 10 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

உத்தர குமாரின் பேச்சை நம்பிய சாந்தி, 10 லட்சம் பணத்தைக் ரொக்கமாக உத்தர குமாரின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளாராம். இந்த நிலையில் உத்தர குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிலையத்தில் வேலை செய்வதற்கான பணி நியமன ஆணை ஒன்றைக் கொண்டுவந்து சாந்தியிடம் கொடுத்துள்ளார். இதை எடுத்துக்கொண்டு சாந்தி மகன் அவினாஷ் சென்னை விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் பணியில் சேர வேண்டும் என்று அந்த உத்தரவைக் காட்டியுள்ளார். அவர்கள் அதை வாங்கிப் பார்த்துவிட்டு, அது போலியான பணி நியமன ஆணை என்று தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவினாஷ், ஊருக்குச் சென்று தனது தாயிடம் விஷயத்தைக் கூறியுள்ளார்.

 

இதையடுத்து தாயும் மகனும் இருவரும் உத்தர குமார் வீட்டுக்குச் சென்று தாங்கள் பணி நியமன ஆணை வழங்கியது போலியானது. எனவே நாங்கள் கொடுத்த பணம் பத்து லட்சத்தைத் திருப்பித் தாருங்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது பணத்தைத் தர முடியாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம் உத்தர குமார். இதையடுத்து, சாந்தி அவரது மகன் அவினாஷ் ஆகிய இருவரும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இருதயராஜ், ரவீந்திரன் ஆகியோர் ஆலோசனையின்படி உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் இந்த வழக்கைப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் 10 லட்சம் பணம் மோசடி செய்த உத்தர குமாரை கைது செய்துள்ளனர்.

 

இதேபோன்று திண்டிவனம் அருகே உள்ள நல்லியக்கோடன் நகரைச் சேர்ந்தவர் தேவதாஸ்(65). இவர் திண்டிவனம் அருகிலுள்ள வெள்ளிமேடு பேட்டை செம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரிடம் சென்று, அவரது மகன் ஜெயக்குமார் என்பவருக்குத் தாம்பரம் மெட்ரோ ரயிலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 60 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். இதேபோல் கலியபெருமாள் நண்பர்களான மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் அய்யாதுரை மற்றும் வெள்ளிமேடு பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் நாராயணன் ஆகியோரிடமும் வேலை வாங்கித் தருவதாக 60 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். இவர்கள் 3 பேரும் வேலை வாங்கித் தருமாறு தேவதாஸிடம் அடிக்கடி சென்று கேட்டுள்ளனர். இதை எடுத்து தேவதாஸ் சென்னை மெட்ரோ ரயிலில் வேலை செய்வதற்கான பணி நியமன ஆணை ஒன்றை தயார் செய்து இவர்களிடம் கொடுத்துள்ளார். அந்த ஆணையை எடுத்துக்கொண்டு மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளைச் சென்று சந்தித்துள்ளனர். அந்த அதிகாரிகள் இது போலியான பணி நியமன ஆணை என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தேவதாசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.