Skip to main content

இளம்பெண் வீடியோ மிரட்டல்... ஆறு மாத தொடர் பலவந்தம்! - பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது!

Published on 21/03/2022 | Edited on 21/03/2022

 

hjk


பள்ளிகளில் பயிலும் டீன்-ஏஜ் மாணவர்கள் ஒன்று சேர்ந்து,   ஆளில்லாத  இடத்தில் அமர்ந்து செல்போனில் ஆர்வமாக வீடியோ பார்க்கிறார்கள் என்றால்,  அவர்கள் மீது பெற்றோர் தனிக் கவனம் செலுத்தவேண்டும் என்பதை,   விருதுநகரில் நடந்த பாலியல் குற்றச்சம்பவம் உணர்த்துகிறது.    என்ன நடந்தது? 

 


விருதுநகர் – பாண்டியன் நகர் பகுதியில் வசிக்கும் 22 வயது ராகசுதாவிடம்  (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மேலத்தெருவைச் சேர்ந்த ஹரிஹரன்  காதலிப்பது போல் பழகுகிறான். கார்மென்ட்ஸ் ஒன்றில் பணிபுரியும் அவளை,   கடந்த 20-8-2021-ல் பெத்தனாட்சி நகரிலுள்ள தனது மெடிக்கல் குடோனுக்கு  வரவழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, அச்சம்பவத்தை  செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளான். அவளுடன் நெருங்கிப் பழகிய வீடியோவை, தனது நண்பர்கள் பிரவீன் மற்றும் ஜுனைத் அகமதுவிடம்  குஷியுடன் காட்டியிருக்கிறான். அதே தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4  பேரும் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். ஹரிஹரனிடம் நடந்துகொண்டதைப்  போல, தங்களிடமும் நடந்துகொள்ள வேண்டுமென்று அவளிடம் வற்புறுத்தி,  சம்மதிக்காவிட்டால் வாட்ஸ்-ஆப் மற்றும் பேஸ்-புக்கில் பரப்பிவிடுவோம் என்று  மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், 7 பேர்  தன்னைத் தொடர்ந்து பலவந்தப்படுத்தி வருவதை, டிரைவர் வேலை பார்க்கும் மாடசாமியிடம் எடுத்துச்சொல்லி, காப்பாற்றும்படி கெஞ்சுகிறாள்.

 

jkl

 

மாடசாமியோ, அந்த பலான வீடியோவை தனது செல்போனுக்கு ஃபார்வேர்ட்  செய்துகொண்டு, ‘அந்த 7 பேரிடம் பழகியதைப் போல என்னிடமும்  பழகவேண்டும். மறுத்தால், இந்த வீடியோவை உன் அம்மாவிடம் காட்டுவேன்.’  என்று மிரட்டி, கடந்த 20-ஆம் தேதி அவளுடைய வீட்டில் வைத்தே பாலியல்  அத்துமீறலை நடத்தியிருக்கிறான்.   உதவ வேண்டிய மாடசாமியும் மிரட்டி, அதே தவறைச் செய்ததால் விரக்தியுற்ற  அவள்,  கடந்த 6 மாத காலமாக வீடியோவைக் காட்டி மிரட்டி, 7 பேர் தன்னைத் தொடர்ந்து சிதைத்து வந்ததையும், மாடசாமியின் அத்துமீறலையும்  குமுறலுடன் புகாராக எழுதி,  விருதுநகர் பாண்டியன் நகர் காவல்நிலையத்தில்  கொடுத்துவிட, பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்கு பதிவாகி  ரிமான்ட் செய்யப்பட்டுள்ளனர்.    இதில் ஹரிஹரனும் ஜுனைத் அகமதுவும் திமுக  இளைஞரணியைச் சேர்ந்தவர்கள்.  


அந்த மாணவர்களின் பெற்றோர்,  மகன்களின் தகாத செயலையும்  எதிர்காலத்தையும் எண்ணிக் கலங்கி அழ,  அவளோ - காதலின் பெயரால்  அத்துமீறி பழகி, பேராபத்தில் சிக்கிய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்