Skip to main content

பெருமாள் கோயிலில் 7 சாமி சிலைகள் திருட்டு; காவல்துறை விசாரணை!        

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

7 Swami idols stolen from Perumal temple in Salem

 

தாரமங்கலத்தில், நூறு ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயிலில் 7 சாமி சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.     

 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயில் அருகில் நூறு ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில் உள்ளது. இந்தக்  கோயிலில் கிருஷ்ணன், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடன், நடராஜன், ஆஞ்சநேயர் ஆகிய கடவுளர் சிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் சராசரியாக அரை அடி உயரமுள்ளவை.     

 

எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்த குமரவேல் (54) என்பவர், இந்தக் கோயிலில் பூசாரியாக உள்ளார். ஊரின் மையப் பகுதியில் கோயில் அமைந்துள்ளதால் எப்போதும் கோயில் அருகே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். மே 20 ஆம் தேதி மாலையில் கோயில் பூசாரி வழக்கம்போல் கோயிலைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். மறுநாள் காலையில் அந்த வழியாகச் சென்ற ஊர்க்காரர்கள் சிலர், கோயிலின் வெளிப்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து தாரமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.  மர்ம நபர்கள் கோயில் கதவை உடைத்து உள்ளே இருந்த 7 சாமி சிலைகளைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.     

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். உள்ளூரைச் சேர்ந்த சிலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கோயில் பூசாரி மற்றும் அன்றாடம் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.