Skip to main content

“கல்லூரி வாசலில் குண்டு வெடிப்பு; தண்ணீர் கூட இல்லாமல் தவித்தோம்” - தமிழகம் திரும்பிய மாணவர்கள் 

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

4 students returned to Tamil Nadu from Manipur

 

மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினரை பட்டியலின பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  இதன் காரணமாக மணிப்பூரில் பிற இனத்தவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி கலவரமாக மாறியது.  பழங்குடியினர் பட்டியலில் ஏற்கனவே இருக்கும் நாகா, குக்கி இன மக்கள், மெய்டீஸ் மக்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மணிப்பூர் மாநில வரலாற்றில் மிக மோசமான வன்முறையாக இது உருவெடுத்துள்ளது. தற்போது வரை நடந்த மோதல்களில் 60க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலம் பெரும் பதற்றத்தில் உள்ளது.

 

மணிப்பூரில் சிக்கியுள்ள பிற மாநிலத்தவரை மீட்க ஒவ்வொரு மாநில அரசுகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மணிப்பூரில் மோரே நகரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்கின்றனர். கலவரக்காரர்களால் அவர்களது வீடுகளும் கடைகளும் தீக்கிரையாகி இருக்கின்றன. இதன் காரணமாக மணிப்பூரில் பிற மாநிலத்தவரும் மெய்டீஸ் இனக்குழுவினரும் சொந்த நிலத்தை விட்டு அகதிகளைப் போல வெளியேறி வருகின்றனர். வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டது. மேலும், 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அம்மாநில அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டது. அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் மணிப்பூரில் இருந்து பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் வெளியேறி வருகின்றனர்.


அந்த வகையில் தமிழ்நாடு அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சந்தோஷ்(18), கேவில்பட்டி முருகலெட்சுமி(19), பூந்தமல்லி கார்த்திக்(21), போரூர் விஷால் சீனிவாசன்(18)  ஆகியோர் முதல் கட்டமாக அயலக தமிழர் நலத்துறை முயற்சியில் சென்னை விமான நிலையம்  வந்தடைந்தனர். அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு பயணிக்கின்றனர். இது குறித்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மாணவர்கள் கூறுகையில், கல்லூரி வாசலில் குண்டு வெடிப்பு நடந்தது. பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும் உணவு, தண்ணீர் இன்றி தவித்த நிலையில் தமிழக அரசு உதவியுடன் மீண்டு தமிழகம் வந்தது மகிழ்ச்சிகரமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.