Skip to main content

கடலூர் புதுச்சேரியில் 2000 மது பாட்டில்கள், 2.50 லட்சம் பணம் பறிமுதல்! 

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

புதுச்சேரியிலிருந்து கடலூர் சாலையில் ரெட்டிச்சாவடி அருகே புதுக்கடை என்ற இடத்தில் கடலூர் மத்திய புலனாய்வு பிரிவு காவல்துறையினர்  வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது மாருதி காரில் கொண்டுவரப்பட்ட 1440 மது பாட்டில்களை  பறிமுதல் செய்து கலால் காவல்துறையில் ஒப்படைத்தனர். 

 

 2000 bottles of liquor in Puducherry, Rs 2.50 lakh money seized!

 

இதேபோல் கடலூர்- விழுப்புரம் மாவட்ட  மத்திய கலால் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  உதவி ஆய்வாளர் அழகிரி தலைமையிலான  காவலா்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள  பவழங்குடி கிராமத்தில் வசிக்கும் பன்னீா்செல்வி என்பவரின்  வீட்டின் பின்புறம் சோதனை செய்ததில்  எந்த வித அரசு அனுமதி இன்றி 180 மி.லி. கொள்ளளவு கொண்ட பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் 493 விற்பனைக்கு வைத்திருப்பது தொியவந்தது. 

 

மேற்கண்ட மதுபாட்டில்களை கைப்பற்றி விருத்தாசலம் மது அமலாக்க பிாிவில் ஒப்படைத்ததுடன் செல்வராசு என்பவரின் மனைவி  பன்னீர்செல்வி மற்றும் அவரது மகள் சாவித்திரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியர்களை தேடி வருகின்றனர் .

 

 2000 bottles of liquor in Puducherry, Rs 2.50 lakh money seized!

 

இந்நிலையில் கடலூர் மாவட்டம்  குறிஞ்சிப்பாடி தம்பிப்பேட்டை மெயின் ரோட்டில் தாசில்தார் சிவா தலைமையிலான பறக்கும் படையினர் அதிரடிசோதனையில் ஈடுபட்டனர்.

 

அப்பொழுது குறிஞ்சிப்பாடி நோக்கி வேகமாக வந்த காரினை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஆலப்பாக்கத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியின் நிர்வாகியான குறிஞ்சிப்பாடி சீனுவாசன் என்வரிடமிருந்து ரூ 2.50 லட்சம்  ரொக்கம் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லும் போது கைப்பற்றப்பட்டு குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்