Skip to main content

17- வது தேசிய தடகள போட்டிகள்... திருவண்ணாமலையில் குதுகலம்!

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

இந்திய தடகள சங்கத்தின் சார்பில் இந்தியா முழுவதும் இளையோருக்கான தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான போட்டியை நடத்த தமிழ்நாடு மாநில தடகள சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது இந்திய தடகள சங்கம். தமிழ்நாடு மாநில தடகள சங்கம், தேசிய அளவிலான போட்டியை திருவண்ணாமலையில் நடத்த வேண்டும் என்று அந்த மாவட்ட தடகள சங்கம் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலையில், தமிழ்நாடு மாநில தடகள சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து நடத்தும், 17- வது தேசிய இளைஞர் தடகள இளையோர் கூட்டமைப்புக்கான போட்டி நடத்த முடிவு செய்துள்ளது.
 


வரும் செப்டம்பர் 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 26ந்தேதி வரையிலான 3 நாட்கள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க தலைவர் மருத்துவர் எ.வ.கம்பன் கூறும் போது, தேசிய இளைஞர் தடகள இளையோர் கூட்டமைப்பு கோப்பைக்கான போட்டிகள் திருவண்ணாமலையில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 950 முதல் 1000 போட்டியாளர்கள் கலந்துக்கொள்கிறார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்முறையாக கோப்பையோடு இணைத்து பரிசுத்தொகையும்  வழங்கப்படவுள்ளது.


ஒரு தேசிய அளவிலான தடகள போட்டி திருவண்ணாமலையில் நடைபெறுவது பெருமைக்குறியது. அதனை நடத்துவதில் மாவட்ட தடகள சங்கம் பெருமைப்படுகிறது. இதில், சர்வதேச, தேசிய போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற பல வீரர்களும் இதில் கலந்துக்கொள்கின்றனர். இறுதி நாள் நிகழ்வில் மாநில தடகள சங்க தலைவர் தேவாரம், திருச்சி மாநகர காவல்துறை இணை ஆணையர் மயில்வாகனம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, காவல்துறை கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி ஆகியோர் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள் என்றார்.

 17th National Athletics Tournament in Thiruvannamalai district


தமிழ்நாடு மாநில தடகள சங்கத்தின் செயலாளர் லதா கூறும்போது, 46 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. காலை முதல் மாலை வரை நடைபெறும். இந்த போட்டியில் கலந்துக்கொள்ளும் வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் இந்த விளையாட்டை நடத்த 250- க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். போட்டியில் கலந்துக்கொள்பவர்களுக்கான மருத்துவ மற்றும் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தும் அரசின் நாடா என்கிற அமைப்பின் மருத்துவர்களும் இங்கு வந்துள்ளனர். அவர்களின் பரிசோதனைக்கு பின்பே வீரர்கள் போட்டியில் கலந்துக்கொள்வார்கள்.


பிற மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், சர்வதேச, தேசிய அளவில் கலந்துக்கொண்டு பரிசுகள் பெற்ற விளையாட்டு வீரர்கள் திருவண்ணாமலை வரும்போது, இங்கு இப்படிப்பட்ட தேசிய அளவிலான மைதானம்மா என ஆச்சரியப்படுவார்கள். ஏன் எனில் இந்தியாவில் சிறந்த மைதானங்கள் என்பது குறைவு. ஆனால் தமிழகத்தில் 9 மைதானங்கள் உள்ளன. இதன் மூலம் விளையாட்டில் தமிழகத்தின் பெருமை மற்ற மாநிலங்களுக்கு விளங்கும்.


இந்த விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 63 பேர் கலந்துக்கொள்கிறார்கள். கடந்த ஆண்டு ஹரியானா மாநிலம் முதலிடத்தை பிடித்தது. இந்த ஆண்டு தமிழக வீரர்கள் முதலிடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார். ஒரு தேசிய அளவிலான போட்டி திருவண்ணாமலையில் நடைபெறுவதால் விளையாட்டு வீரர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.