Skip to main content

வாக்கு எண்ணும் மையத்தில் லேப்டாப்புடன் ரவுண்டடிக்கும் 170 பேர்...- பதறும் வேட்பாளர்கள்!

Published on 18/04/2021 | Edited on 18/04/2021

 

170 people rounding up with laptops at the counting center ... Questionable voting machines ...- Candidates trembling!

 

நெல்லை மாவட்டத்திலடங்கிய திருநெல்வேலி, பாளை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நெல்லையிலுள்ள  அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் காட்சிகள் கண்ட்ரோல் ரூமிலுள்ள டி.வி. ஒளித்திரையில் தெரியும்படி மாணிட்டர் செய்யப்பட்டு அதிகாரிகள், காவலர்கள், வேட்பாளர்களின் முகவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மூன்றடுக்குப் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த மையத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டுள்ளது தெடர்பாக தி.மு.க.வின் வேட்பாளர்கள் மாவட்டக் கலெக்டரான விஷ்ணுவிடம் புகாரும் கொடுத்துள்ளனர். இதனிடையே இந்தக் கல்லூரிக்குள் 170 பேர்கள் தினமும் சென்று வர கலெக்டரால் அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

 

170 people rounding up with laptops at the counting center ... Questionable voting machines ...- Candidates trembling!

 

லேப்டாப் பையுடன் வலம் வரும் அந்த நபர்கள் நேரம் காலமில்லாமல் கல்லூரிக்குள் நினைத்த நேரம் வந்து செல்கிறார்களாம். யார் எப்போது எதற்காக வந்து போனார்கள் என்ற குறிப்பும் கிடையாதாம். வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு யாரும் செல்லமுடியாத தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இங்கே இவர்கள் வந்து செல்வதைக் கண்டித்தும் சந்தேகத்திற்கிடமாகிறது என்று தி.மு.க.வின் வேட்பாளரும் மா.செ.க்களான ஆவுடையப்பன், அப்துல்வகாப் மற்றும் அப்பாவு ஆகியோர் இதுகுறித்து மாவட்டக் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. கரோனா காலத்தில் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் கல்லூரியின் பணியாளர்கள் என்று 170 பேர்கள் அங்கு சென்றுவர அனுமதித்துள்ளார் கலெக்டர். லேப்டாப்புடன் அவர்கள் வந்து செல்வது வாக்கு இயந்திரப் பாதுகாப்பில் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே அவர்களை நிறுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளோம். அவரும் ஒப்புதலளித்திருக்கிறார். தவறினால் கட்சித் தலைமை மூலம் நடவடிக்கை எடுப்போம் என்கிறார் வேட்பாளரான அப்பாவு.

 

170 people rounding up with laptops at the counting center ... Questionable voting machines ...- Candidates trembling!

 

தென்காசி மாவட்டத்தின் 5 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கொடிக்குறிச்சியின் யு.எஸ்.பி. கல்லூரியின் ஸ்ட்ராங்க் ரூமில் மின்தடை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கண்ட்ரோல் ரூமில் மின்தடை இல்லை. இது பிரச்சினையாக உருவெடுத்து பின்பு தி.மு.க. மா.செ. சிவபத்பநாபன் மூலம் கலெக்டரிடம் புகாரும் செய்யப்பட்டு, விளக்கமளிக்கப்பட்ட அடுத்த நாள், அங்குள்ள சங்கரன்கோவில் தொகுதியின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி.யின் காட்சிகள் கண்ட்ரோல் ரூமில் வைக்கப்பட்டுள்ள டி.வி.திரையில் ஒரு சிறிய பகுதி மறைப்பது தெரிய வந்திருக்கிறது. இந்தத் தொகுதியில் அமைச்சர் ராஜலெட்சுமி போட்டியிடுகிறார். இதனை சிவபத்மநாபன் மாவட்டக் கலெக்டரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்கிறார். அதனைப் பணியாளர்கள் ஆய்வு செய்ததில் கேமராவின் லென்சில் சிறிய சணல் ஒன்று இருந்ததால்தான் காட்சிகள் மறைந்தது என்று அதனை நீக்கியுள்ளனர். எனினும் ஸ்ட்ராங்க் ரூமில் மறைக்கும் படியான சம்பவத்தை நாங்கள் எதேச்சையாக நடந்தது என நினைக்கவில்லை. வேண்டுமென்றே மறைக்கப்பட்டதாகச் சந்தேகப்படுகிறோம். மேலும் சங்கரன்கோவில் தொகுதியில் பல்வேறு சம்பவங்கள் நடப்பதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகச் சொல்கிறார் மா.செ. சிவ பத்மநாபன்.

 

வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை இடையேயான வெகு நாட்கள் காலதாமதத்திற்கிடையே வாக்குப்பெட்டி மையங்களில் நடப்பவைகளால் கதிகலங்கிப் போயுள்ளனர் தி.மு.க. வேட்பாளர்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் சூழல் இல்லை” - அமைச்சர் முத்துசாமி

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Minister Muthusamy said total liquor ban cannot be brought in Tamil Nadu

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.  

அதன்படி மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 ஐ திருத்தம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்க மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அப்போது சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி மணி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, “தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனே கொண்டு வர முடியுமா என்பதனை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூரண மதுவிலக்கு கொண்டுவருவதில் அரசுக்கும் விருப்பம் உள்ளது. ஆனால், தற்போது அதற்கான சூழல் இல்லை. படிப்படியாக மதுக்கடைகளைக் குறைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். ஒரு கடையை மூடினால் மற்றொரு கடையில் வாங்கி குடிக்கிறார்கள். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.     

Next Story

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Tamil Nadu Chief Minister's Letter to 8 State Chief Ministers

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதிய ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து நீட் முறைகேடுகளை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. நேற்று டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை வளாகத்தில் போராடிய மாணவர்கள் போலீசார் மீது தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இன்று  நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'மாணவர்களுடைய நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும். நீட் விலக்கு கோரிய தீர்மானம் தொடர்பான சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு கோப்பு நிலுவையில் உள்ளது வருத்தம் அளிக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் தொடர்ச்சியான கோரிக்கை மீண்டும் வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளதோடு, இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் முதல்வர் கடிதத்தில் இணைத்துள்ளார்.

அதேபோல் தேசிய அளவில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என எட்டு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி, ஹிமாச்சல், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.