Skip to main content

லோன் செயலியால் தற்கொலை... உயிரைப் பறித்த 1,500 ரூபாய் ஆன்லைன் கடன் பாக்கி!

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

1,500 rupees debtor who took his life!

 

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் சென்னை மணலியை சேர்ந்த ஐடி பெண் ஊழியர், கரூரில் ஒரு மாணவர் என இரண்டு பேர் ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் லோன் செயலியால் தற்கொலை செய்து கொண்டது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்த சம்பவத்தில் 1,500 ரூபாய் பணத்திற்காக புகைப்படமானது ஆபாசமாக சித்தரிக்கப்பட்டதால் 29 வயது இளைஞர் பாண்டியன் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞர் பாண்டியன். பட்டதாரி இளைஞரான இவர் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாமல் இருந்த பாண்டியன் செலவிற்காக ஆன்லைன் லோன் ஆப்பை டவுன்லோட் செய்து அதன் மூலம் 5,000 ரூபாய் கடன் பெற்று இருக்கிறார். கடன் தொகையில் 1,500 ரூபாயை செலுத்தாத நிலையில் பணத்தை கட்டுமாறு, லோன் ஆப் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. தொடர்ந்து இவர் பணத்தை கட்டாமல் இருந்ததால் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாட்சப் எண்ணிற்கு அனுப்புவோம் என மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

சொன்னபடியே அவதூறு பரப்பும் வகையில் பாண்டியனின் புகைப்படத்தை சித்தரித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு லோன் ஆப்  அனுப்பியுள்ளது. பாண்டியனே தவறான தொழிலுக்கு அழைப்பதுபோல் ஆபாசமாக சித்தரித்து பலருக்கு சமூகவலைதளம் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து பாண்டியன்  மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் பிரச்சனை ஏற்பட, பெற்றோரும் பாண்டியனை கண்டித்துள்ளனர். இதனால் பெற்றோர் முன்பே அறைக்குள் புகுந்து கொண்டு கதவை தாழிட்டுக் கொண்ட பாண்டியன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.