Skip to main content

தமிழகத்தில் 12 நாட்களில் 1,363 பேர் பலி... எங்கே போய் முடியுமோ... நிபுணர்கள் கவலை!

Published on 12/08/2020 | Edited on 12/08/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.


உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து காணப்படுகின்றது. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 1,363 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாதத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை வருமாறு,

 

ஆக. 12 - 119


ஆக. 11 - 118


ஆக. 10 - 114


ஆக. 09 - 119


ஆக. 08 - 118


ஆக. 07 - 119


ஆக. 06 - 110


ஆக. 05 - 112


ஆக. 04 - 108


ஆக. 03 - 109


ஆக. 02 - 119


ஆக. 01 - 98

 


 

சார்ந்த செய்திகள்