Skip to main content

பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல் சும்மா விடுமா? தேர்தல் முடிவு குறித்து தமிமுன் அன்சாரி

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
thamimun ansari



மோடிக்கு எதிரான அலை வெளிப்படையாக வீசத் தொடங்கியிருக்கிறது என்று நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
 

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்த அவர்:-
 

நடைப்பெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்திருக்கக்கூடிய தீர்ப்பு என்பது நாடு தழுவிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

 

மிக முக்கியமாக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் பாஜகவிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பின்னடைவு என்பதும், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்பதும் மக்கள் மாற்றத்தை நோக்கி நகருகிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக இருக்கிறது. 
 

நிச்சயமாக இது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதான ஒரு அரையிறுதி ஆட்டத்தைப்போலவே பார்க்க வேண்டியிருக்கிறது. 
 

மிசோரம் என்பது பொதுவாக வடகிழக்கு மாநிலங்களில் மாநிலக் கட்சிகள்தான் எப்போதும் முக்கியத்துவம் பெறும். அங்கு கூட காங்கிரஸ் இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 

அதேபோன்று காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி என்று சொன்னால் அது தெலுங்கானாவாக மட்டும்தான் இருக்க முடியும். 
 

ஏனென்று சொன்னால் தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவும், ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிமின் தலைவரான அசதுத்தீன் ஒவைசியும் முன்னதாகவே வலுவான கூட்டணியை வைத்து பிரச்சாரத்தில் இறங்கியது அவர்களது வெற்றிக்கு மூலக்காரணமாகும். அங்கும்கூட காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும், பாஜக மூன்றாவது இடத்திலும் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். 
 

எது எப்படி இருந்தாலும் இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு, அதனுடைய நான்கரை ஆண்டு கால மத்திய ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையைத்தான் வெளிக்காட்டுகிறது. 
 

இதனை காங்கிரஸ் கட்சி எவ்வாறு பயன்படுத்திக்கொண்டு எப்படி நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி நகரப்போகிறது என்பதை எல்லோருமே கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
 

மொத்தத்தில் நரேந்திர மோடிக்கு எதிரான அலை வெளிப்படையாக வீசத் தொடங்கியிருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஜி.எஸ்.டி. விவகாரம், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, விலைவாசி ஏற்றம், பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவைகளின் அநியாய விலையேற்றம், நரேந்திர மோடியினுடைய அதானி, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு ஆதரவான போக்கு போன்றவைகளையெல்லாம் இந்த நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது உறுதியாகிறது. இதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் மூலம் உணர முடிகிறது.
 

இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது என்று பாஜகவினர் கூறுகின்றனரே?
 

தோல்வி அடைந்தவர்கள் எப்போதும் சொல்லக்கூடிய சமாதான வார்த்தைகள் இது. 
 

எல்லாவற்றையும் தாண்டி கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டபோதும், தமிழ்நாட்டில் கஜா புயல் சூறையாடியபோதும் பிரதமர் என்பதை மறந்து நரேந்திர மோடி எவ்வாறு நடந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல் சும்மா விடாதல்லவா?.
 

இவ்வாறு கூறினார். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.