Skip to main content

உதயநிதிக்கு பதவி!கலைஞரைப் போல யோசிக்கும் ஸ்டாலின்!

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

தி.முக. இளைஞரணிக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமைப் பொறுப்பு ஏற்கப் போறாருங்கிறது லேட்டஸ்ட் பரபரப்பு. எம்.பி. தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சளைக்காம எல்லா தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தாரு. மற்ற சீனியர்கள் அந்தளவு போகலை. பெரும்பாலானவங்க எம்.பி. வேட்பாளரானதால அவங்கவங்க தொகுதியைத் தான் பார்க்க முடிஞ்சுது. கூட்டணிக் கட்சிகளிலும் வைகோ தவிர வேறு யாரும் பெருசா பிரச்சாரம் பண்ணமுடியாதபடி அவங்கவங்களுக்கும் தொகுதி வேலைகள் இருந்தன. ஸ்டாலினுக்கு அடுத்தபடியா தி.மு.க. சார்பில் அதிகளவில் எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதிகளில் பிரச்சாரம் செய்தவர் உதயநிதிதான். ஒவ்வொரு இடத்திலும் கூட்ட ஏற்பாடுகள் சிறப்பா இருந்தது. சினிமா நடிகர்ங்கிறதால பொதுமக்களும் ஆர்வமா வந்தாங்க. அவரும் ஆளுங்கட்சிக்கும் மத்தவங்களுக்கும் தனி ஸ்டைலில் பதிலடி கொடுத்து கூட்டத்தைக் கவர்ந்தாரு. தேர்தல் முடிவுகள், தி.மு.க.வுக்கு நம்பிக்கை தரும் வெற்றியைக் கொடுத்திருப்பதால, உதயநிதிக்கு இளைஞரணி தலைமைப் பதவி தரணும்ங்கிற வலியுறுத்தல் அதிகமாயிடிச்சி.

 

stalin



சித்தரஞ்சன் சாலை  வீட்டிலிருந்துதான் இந்த ஆலோசனை தொடங்கியிருக்கு. உதயநிதிக்குப் பக்க பலமா இருக்கும் அன்பில் மகேஷ் இது தொடர்பா கட்சி நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டப்ப, பல மா.செ.க் களும் உதயநிதிக்கு இளைஞரணின்னு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க. டி.ஆர்.பாலு போன்ற சீனியர்களும் இதை வலியுறுத்த, ஸ்டாலினுக்கு மட்டும் கொஞ்சம் யோசனையா இருந்திருக்கு.அவர் இளைஞரணி பொறுப் புக்கு வந்தப்ப கலைஞரும் ஆரம்பத்தில் யோசிச்சாரே? ஸ்டாலினுக்கு இளைஞரணிப் பொறுப்பு கொடுக்கணும்னு, அப்ப  கலைஞரிடம் ஆரம்பத்தில் பரிந்துரை செய்தவர், மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன்தான். அதேபோல், இப்ப உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணிப் பொறுப்பைக் கொடுக்கணும்னு தங்கம் தென்னரசு உள்ளிட்டோரின் ஆதரவுக் கோரிக்கை ஸ்டாலின் கவனத்துக்குப் போயிருக்கு. எந்த நேரத்திலும் பொறுப்பு அறிவிக்கப்படலாம்ங்கிற எதிர்பார்ப்பு இருக்குது. 

இது பற்றி திமுக தொண்டர்களிடம் விசாரித்த போது,வெற்றி கிடைச்சிருக்கிற நேரத்துல, அதுக்காக உழைச்சவருக்கு பரிசா பதவி தரலாம்ங்கிறது ஒரு தரப்பின் கருத்து. உள்ளாட்சித் தேர்தல் வரும்போது அது கட்சிக்கு உதவும்ங்கிறாங்க. இன்னொரு தரப்போ, தி.மு.க.வில் பெரிய பதவி எல்லாமே கலைஞர் குடும்பத்துக்கு மட்டும்தான் கிடைக்கும்ன்னு எடப்பாடி தொடங்கி அ.தி.மு.க.வில் அத்தனை பேரும் விமர்சனம் பண்ணுற நேரத்தில், உதயநிதிக்கு உடனடியா பதவி கொடுத்தால், அது தேவையில்லாத விவாதங்களை உருவாக்கும். ஆட்சியை தி.மு.க. பிடிக்கிற வரை, இப்ப கடைப்பிடிச்ச நிதானத்தை ஸ்டாலின் கடைப்பிடிக்கலாம்னு சொல்றாங்க. தி.மு.க.வைப் பொறுத்தவரை ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேல் ஸ்டாலின் கையில் இளைஞரணி இருந்தது. வலுவான கூட்டணி வச்சிருந்தாரு. அப்புறம், வெள்ளக்கோவில் சாமிநாதன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சப்ப, நிர்வாகிகள் ஒத்துழைப்பு சரியா கிடைக்கல. இப்ப தமிழக அரசியலில் இளம் வாக்காளர்களை குறிவச்சி புதுப்புதுக் கட்சிகள் வருவதால் தி.மு.க. இளைஞர்களை ஈர்க்க உதயநிதி போன்ற முகம் தேவைப்படுதாம்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.