Skip to main content

நடிகையும், வேட்பாளரும் நடனமாடி ஓட்டு சேகரிப்பு! - குஷியில் பெண் வாக்காளர்கள்!

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

tn assembly election election campaign bjp leader


தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. வாக்காளர்களைக் கவர்வதற்காக ஒவ்வொரு கட்சியும், அதன் வேட்பாளர்களும் வித்தியாசமான, சுவாரஸ்யமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் சினிமா பிரபலங்களை அதிக அளவில் களத்தில் இறக்கிவிட்டிருப்பது பா.ஜ.க.தான்! அந்த வகையில் அரவக்குறிச்சி தொகுதி தினம் தினம் குஷியில் மிதக்கிறது.

 

tn assembly election election campaign bjp leader

 

இந்த அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை. இவரை ஆதரித்து வாக்கு சேகரிக்க அரவக்குறிச்சியில் இரண்டு நாட்களாக முகாமிட்டுள்ளார் பிக்பாஸ் புகழ் நடிகை காயத்ரி ரகுராம். மத்தியிலுள்ள பா.ஜ.க. அரசு, தமிழகத்திற்குக் கொண்டு வந்துள்ள திட்டங்களைச் சொல்லி, அண்ணாமலைக்காக வாக்கு சேகரித்த காயத்ரி ரகுராம், ஒரு கட்டத்தில் கூட்டத்தில் திரண்டிருந்த பெண்களோடு ஜாலியாக நடனமாடினார். இதனால் அப்பகுதியே ஜாலி மூடுக்கு மாறியது. இந்த நிலையில், வாகனத்தில் நின்றிருந்த அண்ணாமலை கீழே இறங்கி வந்து, காயத்ரி ரகுராமுடனும் அங்கு குழுமியிருந்த பெண்களுடனும் இணைந்து நடனமாடினார். இதனால் அந்தப் பகுதியே கலகலப்பானது.

 

tn assembly election election campaign bjp leader

 

"சீரியஸாக நடந்து கொண்டிருக்கும் பிரச்சாரப் பயணங்களுக்கிடையே இப்படிப்பட்ட ரிலாக்சும் வேட்பாளர்களுக்குத் தேவைப்படுகிறது" என்கிறார்கள் பா.ஜ.க.வினர். வேட்பாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் நடன சுவாரஸ்யங்களை தொகுதிவாசிகள் ரசிக்கவே செய்கிறார்கள்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.