
திருமணத்தை மீறிய உறவு காரணமாக தனது காதலனுடன் பெண் ஒருவர், தனது கணவரைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் , ரங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் எருகளி யாதய்யா. இவரது மனைவி ஜோதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது. எருகளி யாதய்யா தொடர்ந்து மது குடித்து வந்து தனது மனைவி ஜோதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், தான் பணிபுரிந்த பருத்தி ஆலையில், காய்கறி சப்ளையாக இருந்த அசோக் என்பவருடன், ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.
இந்த நிலையில், தனது கணவர் எருகளி யாதய்யாவை காணவில்லை என ஜோதி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போதி ஜோதி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. தனது உறவு வெளியே தெரிந்தால் ஆபத்து ஏற்படும் என்று கருதி ஜோதியும், அசோக்கும் எருகளி யாதய்யாவை கொல்லை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி அன்று உறவினர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி ஜோதி தனது கணவரை கோத்தூர் மண்டலத்தில் உள்ள கூடூர் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, எருகளி யாதய்யா, ஜோதி மற்றும் அசோக் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது யாதய்யா குடிபோதையில் இருந்ததால், ஜோதியும் அசோக்கும், யாதய்யாவின் கழுத்தை அறுத்தி கொலை செய்தனர். அதன் பின்னர், அவரது உடலை பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஜோதி மற்றும் அசோக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.