Skip to main content

"திட்டங்களை நிறைவேற்றுவதில் எஸ்.பி.வேலுமணி கில்லாடி"  -எடப்பாடி பழனிசாமி சர்டிஃபிகேட்! 

Published on 24/01/2021 | Edited on 24/01/2021
ttttt

 

வெற்றி நடை போடும் தமிழகம் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது பிரச்சாரத்தில், திமுகவையும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சிப்பதுடன், தமிழக அரசு செய்துள்ள சாதனை திட்டங்களை பட்டியலிட்டு வருகிறார்.

 

'கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோவையில் உள்ள கோனியம்மன் கோவிலில் வழிபட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கிய  எடப்பாடி பழனிசாமிக்கு, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவையின் முக்கிய வீதிகள் அனைத்தும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. முதல் நாளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் வெள்ளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். 

 

முன்னதாக கோவை தொழிலதிபர்கள் மற்றும் வணிகர் கூட்டமைப்பினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வேலுமணி பற்றி குறிப்பிட்டபோது, "கோவை மாவட்டத்துக்காக பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி மக்களின் அன்பைப் பெறுவதில் எஸ்.பி.வேலுமணி முதன்மையாக திகழ்கிறார். என்னை பார்க்கும் போதெல்லாம் மக்கள் நல திட்டங்களுக்கான கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருப்பார். அவர் கோரிக்கை வைக்காத நாட்களே இல்லை. நிதி இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றி எல்லாமல் கவலைப்படாமல் அதை செய்யுங்க, இதை செய்யுங்க என்று கோரிக்கை வைத்துக் கொண்டே இருப்பார் வேலுமணி. மக்களுக்கான திட்டங்களை அடிக்கடி கேட்டு கேட்டு, அதனை பெறுவதில் மற்ற அமைச்சர்களுக் கெல்லாம், வேலுமணி முன்மாதியாக திகழ்கிறார்" என்று பாராட்டினார். 


 

கோவைக்காக அதிமுக அரசின்  சாதனைகளை பட்டியலிட்ட அவர், "ரூ. 1625 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவினாசி திட்டம்,ரூ. 172 கோடி மதிப்பில் வெள்ளளூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம். ரூ 39.17 கோடியில் உக்கடம் பெரியகுளம் குளக்கரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகுபடுத்தப்படுகிறது. 624 ஏக்கர் பரப்பளவில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள். ரூ. 230 கோடி மதிப்பில் நொய்யல் நதி படுகையில் 18 அணைகள், 22 குளங்கள் புனரமைப்பு. ரூ. 1,620 கோடி மதிப்பில் 10.1 கி.மீ நீளம், 17.25 மீட்டர் அகலத்தில் 4 வழித்தடங்களுடன் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை உயர்மட்ட மேம்பாலம். ரூ. 381 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதி நவீன உபகரணங்கள் மற்றும் புதிய கட்டிடங்கள். தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம் மற்றும் புளியகுளம் ஆகிய 5 பகுதிகளில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ரூ.500.25 கோடி மதிப்பில் ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி வரை 4 வழிச்சாலை. ரூ. 194 கோடி மதிப்பில் காந்திபுரத்தில் 2 அடுக்கு மேம்பாலம் அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என சுட்டிக்காட்டினார் எடப்பாடி பழனிசாமி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.