Skip to main content

“ஆடச் சொன்னால் ஆடணும்; பாடச் சொன்னால் பாடணும்!” - ‘குண்டக்க மண்டக்க’ ராஜேந்திர பாலாஜி!

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

Rajendrabalaji speech at May day

 

“இங்கே நான் மேடைல பேசுறேன்ல. அங்கங்கே உளவுத்துறை போலீஸை வச்சு ரெகார்ட் பண்ணுவாங்க. இவன் என்ன பேசுவான்? எப்படி பேசுவான்? எடக்குமடக்கா பேசுவானே? அப்படின்னுதான். ஆமா.. குண்டக்க மண்டக்க பேசுவேன். அது உண்மைதான். ஆனா.. நியாயமா பேசுவேன்.” என்று சிவகாசியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடந்த மே தின விழாவில் பழைய பாணியில் பேச்சை ஆரம்பித்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, திமுக அரசு மீதான தாக்குதலைத் தொடர்ந்தார். 


“தேனிக்கு போனாரு முதலமைச்சர் ஸ்டாலின். கரண்ட காணோம்னு மக்கள் கேட்கிறாங்க. திமுக ஆட்சிக்கு வந்து இன்னும் ஒரு வருஷம் முடியல. அதுக்குள்ள இத்தனை பிரச்சனைங்க. மக்களை வாட்டி வதைக்கிற வேலையைத்தான் திமுக ஆட்சி பண்ணுது. இங்கே முதலாளிகிட்டயும் துட்டு இல்ல; தொழிலாளிகிட்டயும் துட்டு இல்ல. தமிழ்நாட்டுல நாலு திசையிலயும் மக்கள் திமுகவை குறை சொல்லுறாங்க. இந்த ஆட்சியை மக்கள் விரும்பல. என்ன ஆட்சி இது? எங்கே பார்த்தாலும் பிரச்சனை. இதையெல்லாம் முதலமைச்சர்தான் பார்க்கணும். ஆடச் சொன்னால் ஆடணும்; பாடச் சொன்னால் பாடணும். ரோடு சரியில்லைன்னு சொல்லக்கூடாது. அடுத்தவங்க மேல பழிபோட்டு அவங்கள பிடிச்சு உள்ளே போடறதுல காட்டுற கவனத்தை, இந்த ஆட்சியாளர்கள் மக்களோட நலனில் காட்டணும். இல்லைன்னா, வர்ற தேர்தல்ல மோசமான முறையில திமுக தோற்கும். உள்ளாட்சித் தேர்தல்ல திமுக எப்படி ஜெயிச்சுச்சுன்னு ஊரு உலகத்துக்கே தெரியும். சட்டமன்றத் தேர்தல்ல அப்படி பண்ணமுடியாது. 


கரண்ட் கட்-ங்கிறது  திமுக ஆட்சிக்கு அவமானம். இபிஎஸ் ஆட்சி வேணாம்னு முடிவெடுத்த மக்கள் இப்ப யூபிஎஸ்-ஐ தேடறாங்க. அதிமுகவின் அனைத்து திட்டங்களையும் நிறுத்திய திமுக அரசு, புதிய திட்டங்களைக் கொண்டு வரல. ஓட்டு போட்ட மக்கள் வேதனைல இருக்காங்க. திமுகவினர் எதற்கெடுத்தாலும் கவர்னரை குற்றம் சொல்லுறாங்க. கவர்னர் அதிகாரத்துல யாரும் தலையிடக் கூடாது. கவர்னரை குற்றம் சொல்லிட்டு, ஒன்றிய அரசுன்னு சொல்லுற முதல்வர், ஒவ்வொரு மத்திய அமைச்சர்கிட்டயும் உதவி கேட்கிறார். தமிழ்நாட்டுல ஒரு பேச்சு, டெல்லிக்குப் போனால் ஒரு பேச்சுன்னு முதல்வர் பேசுறார். திமுகவுக்கு வாக்கு வங்கியே கிடையாது. அதிமுகவுல பிளவு ஏற்படும்போது மட்டுமே ஆட்சிக்கு வரும். தமிழகத்தின் நிலவரம் கலவரமாக உள்ளது. இந்த ஆட்சி  நல்லது செய்வதாக யாருமே சொல்லல. திமுக ஆட்சியை மக்கள் விரும்பல” என்று பேசினார். 


ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? ராஜேந்திர பாலாஜியும் அப்படித்தான்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.