Skip to main content

“குறுகிய காலத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.500 வரை உயர்ந்துள்ளது” - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

"The price of cooking gas has gone up to Rs. 500 in a short period of time" - MRK Panneerselvam


2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி 'அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும் என தி.மு.க தலைமை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். 

 

அதன் ஒரு பகுதியாக கிராமங்கள்தோறும் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தவும் அறிவித்துள்ளார். அதன் பேரில் கடலூர் மாவட்டத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  கடலூர் அருகேயுள்ள கே.என்.பேட்டையில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு தொகுதி எம்.எல்.ஏவும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று பொது மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் இருப்பது குறித்து மக்கள் எடுத்துரைத்தனர்.  

 


அப்போது பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “கடந்த ஐந்து ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை உயர்வு மாதாமாதம் ரூ.50, 100 என அடுத்தடுத்து உயர்ந்து வருகிறது. குறுகிய காலத்தில் 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதையெல்லாம் பெண்கள், ஆட்சியாளர்களிடம் கேட்க வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஆட்சி மாற்றத்தை கொடுங்கள். கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம். தி.மு.க சொல்வதைத்தான் செய்யும், செய்வதைத்தான் சொல்லும்” என்றார். 

 

இதனிடையே எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடலூர் கிழக்கு மாவட்டத்தில் 27.12.2020 முதல் 10.01.2021 வரை அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் 230 ஊராட்சிகள்,  நகராட்சிப் பகுதிகளில் 23 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 12 வார்டுகள் என மொத்தம் 365 இடங்களில் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய,  நகராட்சி, பேரூராட்சி கழக செயலாளர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. 

 

அந்த சமயம், அந்தந்த பகுதிகளில் நடைபெறும் மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர,  பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள்,  கழக முன்னோடிகள், விவசாயிகள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.