



Published on 05/01/2022 | Edited on 05/01/2022
2022ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒமிக்ரான் பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டம் துவங்கியது. அப்பொழுது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது.