Skip to main content

“ஓபிஎஸ் வசதியாக மறந்துவிட்டார்” - அமைச்சர் ஆர். காந்தி குற்றச்சாட்டு

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

Minister R. Gandhi's response to OPS comment

 

பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்குவது குறித்து அதிமுக ஆட்சியில் நடந்ததை ஓபிஎஸ் மறந்தது கண்டனத்திற்கு உரியது என அமைச்சர் ஆர்.காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

 

பொங்கல் திருநாளை ஒட்டி மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கவில்லை என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வேட்டி சேலை வழங்கப்படுமா என்கிற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமை உணர்வும் அரசுக்கு உள்ளது. எனவே முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு இந்த ஆண்டுக்கான இலவச வேட்டி சேலைகளை ரேஷன் கடைகள் வழியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்பே வேட்டி சேலைகள் பொது மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் இதுகுறித்து  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்குவது தொடர்பாக 488 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  1.77 கோடி சேலைகள் 1.77 கோடி வேட்டிகள் உற்பத்தி செய்ய பட்டியல் பெறப்பட்டு அதன் அடிப்படையில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளது. 

 

கோ-ஆஃப்டெக்ஸ் மற்றும் கைத்தறி வளர்ச்சி கழக நிறுவனங்கள் முகமை நிறுவனங்களாக நியமிக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பே கடந்த ஒன்பதாம் தேதி அன்று சென்னை மயிலாப்பூர் சத்யா நகரில் பயனாளிகளுக்கு வேட்டி சேலை வழங்கும் பணியை முதல்வர் துவக்கி வைத்தார். இந்த பணி பிப்ரவரி மாதத்தில் நிறைவு பெறும். அதிமுக ஆட்சியில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பல மாதங்கள் கழித்து இலவச வேட்டி சேலைகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.

 

இவ்வாறு, பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பல மாதங்கள் கழித்து அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டதை ஏனோ ஓ.பன்னீர்செல்வம் வசதியாக மறந்துவிட்டார். வேட்டி சேலை விநியோக திட்டம் இவ்வாறு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை அறிக்கையாக வெளியிடுவது கண்டனத்திற்குரியது.” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.