Skip to main content

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனை தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு... ராமதாஸ் இரங்கல்.. 

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

Maharashtra government hospital children incident pmk ramadoss Mourning


மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் இன்று (09/01/2021) அதிகாலை 02.00 மணிக்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பச்சிளங்குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அதிர்ஷ்டவசமாக 7 பச்சிளங்குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

 

இதற்கு இரங்கல் தெரிவித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிக்கும் இரங்கல் செய்தி: “மராட்டிய மாநிலம், பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்