Skip to main content

எல்லைப் பகுதியில் ஹெலிகாப்டர் தளம்! இந்தியாவை மிரட்டும் சீன ராணுவம்! 

Published on 01/09/2020 | Edited on 01/09/2020
Helicopter base

 

 

இந்திய-சீன எல்லைப் பகுதியில் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவை கோபப்படுத்தும் அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது சீனா. இதனால், எல்லைப் பகுதிகளில் போர் பேகங்கள் சூழ்வதும், களைவதுமாக இருக்கின்றன.

 

கடந்த 2017-ல் இந்தியா-சீனா-பூடான் இடையே அமைந்துள்ள லோக்டாம் எல்லைப் பகுதியில் புதிய சாலைகளை அமைக்க முயற்சித்தது சீன ராணுவம்.  இதனால் இந்திய-சீன படைகளுக்கிடையே மோதல் வெடித்தது. இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தைகளில் சாலை பணிகளை நிறுத்தியது சீனா.

 

அதேபோல, கடந்த ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை சீனா ஆக்ரமிக்க முயற்சிக்க, இரு நாடுகளின் வீரர்களுக்கிடையே தாக்குதல் நடந்தது. அதில் 20 இந்திய வீரர்கள் பலியானார்கள். இதனால் எல்லைப் பகுதியில் சூழ்ந்த போர் பதட்டம் தெற்காசிய பிராந்திய நாடுகள் அதிர்ச்சியடைந்தன. இந்திய-சீனா தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் மோதல்கள் தற்காலிகமாக நிருத்தப்பட்டிருந்தாலும் லடாக் பகுதியில் போர் பதட்டம் இப்போதும் குறையவில்லை.

 

இப்படிப்பட்ட சூழலில், சிக்கிம் பகுதியில் இந்தியாவை சீண்டும் நடவடிக்கைகளில் குதித்துள்ளது சீனா...  அதாவது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் அருகே உள்ள தனது எல்லைப் பகுதிகளான டோகா லா மற்றும் நாது லா ஆகிய இடங்களில் பல்வேறு வகையிலான கட்டுமான பணிகளை சீன ராணுவம் மேற்கொண்டு வருகிறது. அந்த பணிகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இதனை இந்தியா, உற்று கவனித்து வருகிறது.

 

இந்த நிலையில், சிக்கிம் மாநிலத்தை ஒட்டியுள்ள மற்றொரு பகுதியான டோக்லாம் என்கிற இடத்தில் ஏவுகணை ஏவு மையங்களை சீனா அமைத்து வருகிறது. இந்த மையத்தின் மூலம்,  விண்ணில் உள்ள ஒரு இலக்கை தரையில் இருந்தபடி அதிவேகத்தில் தாக்க முடியும்.  அதிக தொழில் நுட்பத்துடன் இந்த ஏவுகணை மையத்தை சீனா அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

மேலும், இந்த மையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் தளங்களையும் சீனா அமைத்து வருகிறது. இதனை சாட்டிலைட் படங்கள் மூலம் கண்டறிந்துள்ளது இந்திய புலனாய்வு அமைப்புகள். இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் இந்தியாவை மிரட்டும் வகையில் அத்தனை ராணுவ நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது சீனா.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 10 பேர் பலி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Malaysia Military Helicopter incident 

இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெரக் பகுதியில்   இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் கடற்படை ஒத்திகைக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் எதிர்பாராத விதமாக இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கின்றன.

இந்த விபத்தில் 10 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய நாட்டின் கடற்படை தினத்தின் 90 ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகக்  கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.