Skip to main content

சொந்த ஊரில் வாக்களித்த இ.பி.எஸ்..! 

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

Edappadi Palanisamy cast vote


தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது  தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

 

பொதுமக்களும் காலை முதல் தங்களது வாக்குகளை செலுத்த தீவிரம் காட்டிவருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும், திரைத்துறை நட்சத்திரங்களும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்