Skip to main content

நான் சொல்றதைத்தான் கேட்கணும், இல்லன்னா பதவியை பறிச்சிடுவேன்... திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்ற தகவல்!

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 16 கவுன்சிலர் வார்டுகள். இதில் 8 வார்டுகளில் தி.மு.க. தனித்து வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 1, பா.ம.க. 4, சுயேட்சை, அ.ம.மு.க., தே.மு.தி.க. தலா 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்நிலையில், தி.மு.க.வின் பெரணமல்லூர் கிழக்கு ஒ.செ. ராமசாமி, தான் பதவி வகிக்கும் கிழக்கு பகுதியில் வெற்றிபெற்ற மூன்று தி.மு.க. கவுன்சிலர்களை அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அழைத்துச் சென்றார். இதற்காக அவருக்கு மட்டும் அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் தரப்பில் இருந்து 30 லட்ச ரூபாய் தரப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.வின் பலம் 5 ஆக குறைந்தது.
 

dmk



ஜனவரி 6-ந் தேதி பதவியேற்புக்கு அ.தி.மு.க. ஒ.செ. செல்வராஜ், தே.மு.தி.க. மா.செ. தெள்ளார் கோபி, பா.ம.க. ஒ.செ.வுடன் தி.மு.க. ஒ.செ. ராமசாமி ஒரே காரில் வந்து இறங்கி, தன் பக்கம் நின்ற தி.மு.க. கவுன்சிலர்கள் மூன்றுபேரை பதவியேற்புக்கு அனுப்பிவைத்தார். பதவியேற்கும்போது அங்கிருந்த தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டுரங்கன் தலைமையிலான தி.மு.க.வினர், அணி மாறிய தி.மு.க. கவுன்சிலர்களிடம் கேள்வி எழுப்பினர். நான்தானே சீட் வாங்கித் தந்தேன். "நான் சொல்றதைத்தான் கேட்கணும், இல்லன்னா பதவியை பறிச்சிடுவேன்னு ஒ.செ. சொன்னார்' என அப்பாவியாய் சொல்லினர். "அந்தாளால் ஒண்ணும் பண்ண முடியாது, கட்சித் தலைமை நினைத்தால்தான் எதுவும் செய்ய முடியும்' எனச்சொல்ல, பதவி ஏற்றுக்கொண்ட பின், பிரச்சினைக்குரிய 3 தி.மு.க. கவுன்சிலர்களில் இருவர் பாண்டுரங்க னுடன் சென்றனர். ஒரு தி.மு.க. பெண் கவுன்சிலர் மட்டும் அ.தி.மு.க. பக்கம் போன தி.மு.க. ஒ.செ. ராமசாமியுடன் சென்றார். போலீஸார் அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.


இந்த தகவல் தி.மு.க. மா.செ. எ.வ.வேலுவுக்கு சொல்லப்பட்டது. அவர் அந்த பெண் கவுன்சிலரின் கணவருக்கு போன்செய்து பேசினார். அந்தப் பெண் கவுன்சிலரின் கணவர் தனது மனைவியை வரவைத்தார். 8 தி.மு.க. கவுன்சிலர்களுடன், சுயேட்சையாக போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றிபெற்ற தி.மு.க. காமாட்சி இணைந்தார். 9 கவுன்சிலர்களும் தி.மு.க. தரப்பில் சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திராஇளங்கோவன் கட்டுப்பாட்டில் விடப்பட்டனர். 9 கவுன்சிலர்களுடன் தி.மு.க. தரப்பு பாண்டிச்சேரியில் சூட் ரூம் போட்டு பாதுகாப்பாக இருந்து வருகிறது. மீதியுள்ள 7 கவுன்சிலர்களுடன் திருநள்ளாறில் ரூம் போட்டு தங்கினார் அ.தி.மு.க. ஒ.செ. செல்வராஜ். அங்கிருந்து ஒரு கவுன்சிலர் எஸ்கேப்பாகி தி.மு.க.வின் எல்லைக்குள் வந்துவிட்டார். அ.தி.மு.க. பலம் தற்போது 6-ஆக குறைந்துள்ளது. "சேர்மன் தேர்தலின்போது பாருங்க, அதிசயம் நடக்கும்' என அ.தி.மு.க. இப்போதும் சவால் விட்டுக்கொண்டுள்ளது.


இதே மாவட்டம், ஜம்னாமத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 7 கவுன்சிலர் வார்டுகள். இதில் 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 2 வார்டுகளில் தி.மு.க.வும், 1 வார்டில் தே.மு.தி.க.வும், 1-ஆவது வார்டில் சுயேட்சையும் வெற்றிபெற்றனர். சுயேட்சையாக வெற்றி பெற்றவர் தி.மு.க.வுக்கு சாதகமாக திரும்பிவிட்டார். அப்படியிருந்தும் அ.தி.மு.க., தே.மு.தி.க. ஆதரவுடன் 4 கவுன்சிலர்கள் என முன்னிலையில் இருந்தது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காளி என்கிற கவுன்சிலர், தனக்கு துணைசேர்மன் பதவி வேண்டும் என கேட்டுள்ளார். இதனை ஜம்னாமத்தூர் அ.தி.மு.க. ஒ.செ. வெள்ளையன் மறுத்ததோடு, காளியை மோசமாக பேச காளி கோபமாகிவிட்டார். இதனை அறிந்த தி.மு.க. நிர்வாகிகள் காளியிடம் பேசியதும் காளி தலைமறைவாகிவிட்டார். "தி.மு.க.வினர்தான் கடத்திவிட்டார்கள்' என ஒ.செ. வெள்ளையன் குற்றம்சாட்டினார்.

கடந்த ஜனவரி 6-ந் தேதி ஜம்னாமத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெற்றி பெற்றவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். பதவி யேற்புக்கு வந்த கவுன்சிலர் காளியை, வெள்ளையன் ஆட்கள் தாக்க முயன்றனர். அவரை போலீஸார் பாதுகாப்பாக பதவியேற்க வைத்து அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
 

 

dmk



இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கவுன்சிலர் காளி, "என்னை ஒருபக்கம் அ.தி.மு.க.வும் இழுக்குது. மற்றொரு பக்கம் தி.மு.க.வும் இழுக்குது. நான் இரண்டு பக்கத்தில் யார் பக்கம் போகணும்கிறதை அமைச்சர், எம்.எல்.ஏ., கலெக்டரை சொல்லச் சொல்லுங்க. அவுங்க சொல்றதை கேட்டுக்கறேன். இரண்டு பக்கமும் என்னை கொலை செய்யப் பார்க்கறாங்க. என் உயிருக்குப் பாதுகாப்பில்லை; அதனால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்' எனப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை காவல்துறையினருக்கும் கோரிக்கையாக எழுதித் தந்தார். அதனால் கவுன்சிலர் காளி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு தரப்பும் விடாமல் காளியிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தின.

"என் மகள் ஜீவா சேர்மனாவதற்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்க லன்னா நீங்க யாரும் மலையிலயே இருக்க முடியாது'' என ஒ.செ. வெள் ளையன், கவுன்சிலர்களை மிரட்ட மிரண்டுபோயுள்ளனர் அ.தி.மு.க., தே.மு.தி.க. கவுன்சிலர்கள்.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கர்; 5 தனிப்படைகள் அமைப்பு

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Absentee MR Vijayabaskar; 5 personnel system

தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வருகின்றனர்.

Next Story

முதல்வரின் கடிதம்; கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைமுகப்படுத்தி மத்திய அரசு பதில்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
nn

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவித்து தாயகம் அழைத்தவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று முறை கடிதம்  எழுதி இருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் கடிதத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், '1974ம் வருடம் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இடையேயான ஒரு ஒப்பந்தத்தின் (கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைமுகமாக குறிப்பிட்டு) அடிப்படையில் மீனவர் பிரச்சனை ஆரம்பமானது. அன்றிலிருந்து எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்களோ அப்போதெல்லாம் மத்திய அரசின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மீனவர்களின் நலன் காப்பதில் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகபட்ச முன்னுரிமை தருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.