Skip to main content

நேர் எதிர் இரண்டு வேட்பாளர்களும் - நேர் எதிர் மாவட்ட செயலாளர்களும் சந்தித்த போது நடந்தது என்ன?

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

திருச்சி எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் சிறுபான்மையினர் ஓட்டு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக கிறிஸ்தவர்கள் ஓட்டு என்பது பெரும்பான்மையாக பரவலாக திருச்சி மாநகர் முழுவதும் இருக்கிறது. 

 

dmk and ammk candidates met each other

 

பிஜேபி ஆட்சியில் கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த அடிப்படையில் இந்த முறை கிறிஸ்தவர்கள் பிஜேபிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எதிராக வாக்களிக்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றி அதை அவர்களுக்குள்ளே பகிர்ந்தும் வருகிறார்கள். 
 

அதனால் தருமபுரியிலிருந்து அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்கு சிறுபான்மையினர் ஓட்டு கிடைப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என்பதை அவர்களே அறிந்திருக்கிறார்கள். 
 

இந்த நிலையில் திருச்சி மாநகரில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருப்பதால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் லோக்கல் பிரமுகர் அடைக்கலராஜ் மகன் ஜோசப்லூயிஸ் சீட்டு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று அனைத்து கிறிஸ்தவ நிறுவனங்களிலும், சபைகளிலும் ஜோசப்லூயிசுக்கு வாக்களிக்க முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் திருநாவுக்கரசருக்கு காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு கொடுத்ததால் கிறிஸ்தவர்கள் குழப்பமான நிலையில் இருக்கிறார்கள். 

 

காரணம் திருநாவுக்கரசர் பிஜேபியிலிருந்து அணி மாறி வந்தவர் என்பதாலும் டிடிவி பிஜேபி எதிர்ப்பு மனநிலையில் உறுதியாக இருப்பதாலும் அந்த கட்சியின் சார்பில் நிற்கும் சாருபால தொண்டைமான் லோக்கல் விஐபி என்பதாலும் அத்தோடு அமுமுக மாநகர செயலாளர் சீனிவாசன் கிறிஸ்தவ அமைப்புகளின் உள்ள முக்கியமானவர்களோடு நெருக்கமான தொடர்புகளில் இருப்பதால் முஸ்லீம் அமைப்பும் டிடிவிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் திருச்சியில் சிறுபான்மையினர் வாக்குகளை யார் அறுவடை செய்யப்போகிறார்கள் என்பது பெரிய விவாதமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

 

இந்த நிலையில் இன்று காலை திருச்சி ரோமன் கத்தோலிக்க ஆயர் தேவதாஸ் ஆம்புரோஸ் ஆயரை சந்தித்த அமுமுக மாநகர செயலாளர் சீனிவாசன் மற்றும் வேட்பாளர் சாருபாலா ஆகியோர் ஆசீர்வாதம் வாங்கி திரும்பும்போது திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மற்றும்  திருநாவுக்கரசர் உள்ளே நுழைந்தனர். அப்போது கே.என்.நேரு சிரித்துக்கொண்டே எதிரே நின்ற அமுமுக சீனிவாசனிடம் நம்ம இரண்டு பேருக்கும் பண்ணையடிக்கிறதே வேலையா இருக்கு என்றார்  ஜாலியா சிரித்துக்கொண்டே.

 

தற்போதைய காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரும், முன்னாள் காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலாவுடன் பிரச்சாரம் எப்படி இருக்கு என்று இரண்டு வேட்பாளர்களும் நலம் விசாரித்துக்கொண்டிருந்தனர். 

 

வெளியே இரண்டு பேரும் சிரித்துக்கொண்டே இருந்தாலும் சிறுபான்மையினர் வாக்குகளை யார் பெறுவது என்பதில் பெரிய போட்டியே நடக்கிறது என்பது மட்டும் உண்மை! 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.