Skip to main content

''தம்பி இங்க பாருங்க நேற்றைக்கு மட்டும்...''- செய்தியாளர் சந்திப்பில் கோபமடைந்த எல்.முருகன்!   

Published on 06/03/2022 | Edited on 06/03/2022

 

 "Brother, look here only yesterday ..." - L. Murugan angry at the press conference!

 

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

 

இன்று சென்னை சவுகார்பேட்டையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், ''கிட்டத்தட்ட 90 சதவிகித மாணவர்கள் இங்கு வந்துவிட்டார்கள். மீதி மாணவர்களையும், மாணவர்கள் மட்டுமில்லாது கடைசி பிரஜை இருக்கும் வரை அவர்களை மீட்பதுதான் நமது அரசின் மிக முக்கிய எண்ணமாக இருக்கிறது. அதுதான் முதல் கடமையாகவும் இருக்கிறது'' என்றார்.

 

அப்பொழுது குறுக்கிட்ட பத்திரிகையாளர் ஒருவர், 'நேற்று 800 மாணவர்கள்தான் மீட்கப்பட்டதாகவும், மத்திய அரசு மாணவர்களை மீட்பதில் சுணக்கம் காட்டுவதாகவும் கூறுகிறார்களே' என கேட்க, கோபமடைந்த எல்.முருகன், ''தம்பி இங்க பாருங்க, நேற்றைக்கு மட்டும் 3,000 மாணவர்கள் வந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாட்டிற்கு வந்தாச்சு. ஆனால் வெறும் 800 பேர் என்று சொல்றீங்க. தவறான தகவலை கேள்வியாகவே வைக்கக்கூடாது. இது ஒரு சிக்கலான நேரம். ஒரு போர் நடக்கின்ற இடத்தில் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து, இங்கிருந்து நான்கு அமைச்சர்கள் அங்கு போயிருக்கிறார்கள். கடும் பனியிலும் களத்தில் நிற்கிறார்கள். மாணவர்களை மீட்டு இந்தியா வருவதோடு மாணவர்கள் சொந்த மாநிலம், சொந்த கிராமத்திற்குச் செல்லும் வரை மத்திய அரசும், பிரதமர் மோடியும் பார்த்துக்கொள்கிறார்கள்'' என காட்டமாகப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.