Skip to main content

"தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்களிடையே முரண்பாடுகள் இல்லை!"- புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பேட்டி! 

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

"There are no contradictions among the National Democratic Alliance MLAs!"- Puducherry Speaker Selvam Patti!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க மற்றும் பா.ஜ.க. ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் மக்கள் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும், முதலமைச்சர் ரங்கசாமியை மாற்ற வேண்டுமெனவும் பா.ஜ.க. ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதற்கு என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களிடையே இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

"There are no contradictions among the National Democratic Alliance MLAs!"- Puducherry Speaker Selvam Patti!

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சட்டபேரவை வளாகத்தில் சபாநாயகர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க, ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றதைத்  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், "சில அதிகாரிகள் சரியாக செயல்படாததன் காரணமாக பல்வேறு தொகுதிகளின் மக்கள் பணிகள் நடைபெறவில்லை. சரியாக செயல்படாத அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. இனி வரும் காலங்களில் கூட்டணிக் கட்சியினரை விமர்சிக்காமல், சட்டமன்ற கட்சித் தலைவர் மூலமாக பிரச்சனைகளைத் தெரிவிக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர்களிடம் அறிவுறுத்தி உள்ளோம்" என கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.