Skip to main content

கண்களில் ரத்தம்...கதறிய பிரபல டிவி நடிகை...போலீஸ் விசாரணை!

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருபவர் நடிகை நளினி நேகி. இவர் ஒஷிவரா போலீசாரிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில், சில வருடங்களுக்கு முன்பு நானும் பிரீத்தியும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக தங்கியிருந்தோம். பின்பு ஒன்றாக தங்க விருப்பம் இல்லாததால், சில நாட்கள் கழித்து நான் தனியாக இருக்க விரும்பினேன். எனவே அந்த அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேறி தனியாக வீடு பார்த்து அங்கு தங்கினேன். இந்த நிலையில் சமீபத்தில் பிரீத்தி தனக்கு வீடு கிடைக்கவில்லை எனவும் அதனால் சிறுது நாட்கள் தன்னுடன் தங்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார். 

 

actress



நானும் அவளை என்னோடு தங்கி கொள்ள அனுமதித்தேன். நான் தற்போது இருக்கும் வீடு 2 படுக்கை அறை கொண்ட வீடு  என்பதால் என்னோடு தங்கிக்கொள்ள அனுமதித்தேன். கொஞ்ச நாள் கழித்து பிரீத்தியின் அம்மாவும் வீட்டில் அவளோடு தங்கினார். தான் வீடு காலி செய்ய எனது அம்மா உதவிக்கு வந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார் பிரீத்தி. ஆனால் அவர்கள் வீட்டை காலி செய்யாமல் என்னுடைய வீட்டிலேயே தங்கி விட்டனர். சிறிது நாள் கழித்து ஊரில் இருந்து என்னுடைய அப்பா, அம்மா என்னை பார்ப்பதற்காக வருவதாக சொன்னார்கள். இதனையடுத்து ஊரில் இருந்து என்னை பார்க்க எனது பெற்றோர் வருவதால் வீட்டை காலி செய்யுங்கள் என்று பிரீத்தி மற்றும் அவரது அம்மாவிடம் கூறினேன். இதற்கு அவர்களும் சரி என்று சம்மதம் தெரிவித்தனர். 


இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி நான் எனது நண்பருடன் ஜிம்மிற்கு செல்ல கிளம்பி கொண்டிருந்தேன். அப்போது பிரீத்தியின் அம்மா என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் ஏன் இப்படி பேசுறீங்க என்று கேட்டேன். அப்போது பிரீத்தியிடம் அவளது அம்மா நான் அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டியதாக கூறினார். இதை நம்பிய பிரீத்தி என்னை அசிங்கமாக திட்ட ஆரம்பித்தாள். பின்பு உடனே அவரது அம்மா கையில் வைத்திருந்த கண்ணாடி கிளாசால் என் முகத்தில் அடித்தார். பின்னர், இருவரும் சேர்ந்து என்னை கொடூரமாக தாக்க ஆரம்பித்துவிட்டனர். கிட்டதட்ட என்னை அவர்கள் கொள்ள முயற்சி செய்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் புகைப்பட ஆதாரங்களுடன் அவர் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அவர்களும் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.