Skip to main content

சசிகலா ரிலீஸ்... மருத்துவமனைக்கு புறப்பட்டனர் சிறை அதிகாரிகள்! 

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

Sasikala

 

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்த சசிகலா இன்று (27.01.2021) காலை 10.30 மணிக்கு விடுதலையாக உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவுக்கு, கடந்த 20 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு, பின்னர் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது கரோனா தொற்று நீங்கியிருந்தாலும் தொடர்ந்து அவருக்கு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நான்காண்டு கால சிறைவாசத்திலிருந்து இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாக இருக்கிறார். 

 

தற்பொழுது பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விக்டோரியா அரசு மருத்துவமனைக்குப் புறப்பட்டனர். சிறைத்துறை கண்காணிப்பாளர் லதா தலைமையிலான போலீசார், சசிகலாவிடம் கையெழுத்து பெற உள்ளனர். அதேபோல் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் மருத்துவமனைக்கு  வருகை தந்துள்ளார். அதேபோல் விடுதலையாகும் சசிகலாவை காண விக்டோரியா மருத்துவமனையின் வெளியே அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் குவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்