Published on 10/04/2019 | Edited on 10/04/2019
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமேதி, வயநாடு ஆகிய இருதொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது.
![rahul gandhi files nomination in amethi](http://image.nakkheeran.in/cdn/farfuture/SkvkGC_JN31Wbq0Wc2hJgs004SIgdDsS-QdvmghLJ3Q/1554882397/sites/default/files/inline-images/rahul-pri-std.jpg)
இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 4 ஆம் தேதி கேரளாவின் வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான அமேதியில் இன்று மனு தாக்கல் செய்தார்.