Skip to main content

"இது ஒரு சாமி கட்சி" - முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

puducherry cm talks about nr congress god party 

 

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா பக்கமுடையான்பேட் இசிஆர் சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனத் தலைவரும், புதுச்சேரி முதலமைச்சருமான என்.ரங்கசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தனது ஆன்மீக குருவான அப்பா பைத்தியசாமி படத்திற்குத் தீபாராதனை காண்பித்து சாமி தரிசனம் செய்தார். உடன் என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள்,  எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபடும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

அதனைப்  பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "கட்சி தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காகவும்,  மக்கள் நலனுக்காகவும் தொடங்கப்பட்டது தான் என்.ஆர்.காங்கிரஸ். கட்சியின் நோக்கம் புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும், அனைத்து திட்டங்களையும் மக்கள் பெற வேண்டும் என்பது தான். ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வந்தோம். இடையில் ஆட்சி செய்தவர்கள் அந்த திட்டங்களை செயல்படுத்தவில்லை. இப்போது மீண்டும் நமது அரசு ஆட்சியில் அமர்ந்ததும் கடந்த ஆட்சியில் விடுபட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் விரைவில் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி விடுவோம்.

 

கட்சி தொடங்கும் போது மாநில அந்தஸ்தைப் பெறுவோம் என கூறினோம். தற்போது அது தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கேட்கும் கோரிக்கை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு தான் தெரியும்  அந்த கஷ்டங்கள். எல்லோருக்கும், அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தேவையானது மாநில அந்தஸ்து தான். தனிப்பட்ட முறையில் எனது கோரிக்கை மட்டுமல்ல. மாநில அந்தஸ்து கோரிக்கை மாநில வளர்ச்சி, மக்கள் நலனுக்கான கோரிக்கை தான் இது. மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சியின் வளர்ச்சி இருக்குமா இருக்காதா என்று எண்ணம் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் தோன்றும். நிச்சயமாக கட்சி நல்ல வளர்ச்சியில் இருக்கும். இது ஒரு சாமி கட்சி.  அதனால் கட்சி நிச்சயம் வளர்ச்சியில் இருக்கும்" என பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.