Skip to main content

ராஜீவ் காந்தி கேல் ரத்னா பெயர் மாற்ற விவகாரம்: கோரிக்கை விவரங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு!

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

pm modi - rajiv gandhi khel ratna award

 

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது’ என மாற்றப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் ஆறாம் தேதி அறிவித்தார்.

 

அப்போது  பிரதமர் மோடி, தயான் சந்த் பெயரில் கேல் ரத்னா விருது வழங்க நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு குடிமக்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தப் பெயர் மாற்றப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில், தி வயர் (the wire) ஊடகம், கேல் ரத்னா விருதுக்கு தயான் சந்த்தின் பெயரைச் சூட்ட எத்தனை கோரிக்கைகள் வந்தன என்பது குறித்தும், அந்தக் கோரிக்கைகளின் நகல்களைத் தர வேண்டும் என கேட்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தது.

 

rti reply

 

இந்தநிலையில், தி வயர் ஊடகத்தின் மனுவிற்குப் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 2 (f)இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 'தகவல்' என்ற வரையறைக்குள் வரவில்லை என தெரிவித்து, தயான் சந்த் கேல் ரத்னா என பெயர் சூட்ட வேண்டும் என வந்த கோரிக்கைகள் தொடர்பான விவரங்களைத் தர மறுத்துள்ளது.

 

இதனையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 2 (f)இல் தகவல் என்பது, ‘பதிவுகள், ஆவணங்கள், குறிப்புகள், மின்னஞ்சல்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆர்டர்கள், பதிவு புத்தகங்கள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், ஆவணங்கள், மாதிரிகள், மின்னணு வடிவத்தில் உள்ள தரவுப் பொருள்’ என எந்த வடிவிலும் இருக்கலாம் என கூறப்பட்டிருப்பதையும், அரசு அதிகாரிகளால், நடப்பு சட்டத்தின் கீழ் அணுகப்படக்கூடிய தனியார் நிறுவனங்கள் தொடர்பான விஷயங்களும் தகவல் என்ற வரையறைக்குள் வரும் என அதே தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 2 (f)-ன் கீழ் கூறப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள தி வயர் ஊடகம், பிரதமர் அலுவலகம் அளித்த பதில் அபத்தமானது என்றும், சட்டத்திற்குப் புறம்பானது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.