Skip to main content

ஒடிசா ரயில் விபத்து; விபரங்கள் வெளியீடு

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

Odisha train accident; Publication of details

 

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது.

 

தற்போதைய நிலவரப்படி 233 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்நிலையில் ரயிலில் பயணித்தோரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கோரமண்டல விரைவு ரயிலிம் பி7 பெட்டியில் 22 பேரும், பி8 பெட்டியில் 9 பேரும், ஏ2 பெட்டியில் 31 பேரும் பயணித்துள்ளனர். பி2 முதல் பி9 வரை உள்ள ஏழு பெட்டிகளும் ஏ1,ஏ2 பெட்டிகளும் தடம் புரண்டன. பெங்களூர் - ஹவுரா ரயிலின் ஒரு பொதுப் பெட்டியும் 2 சரக்கு பெட்டிகளும் , ஏ1 பெட்டியும் தடம் புரண்டன.

 

ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு கொல்கத்தாவில் இருந்து மீட்புக்குழு விரைகிறது. ரயில் விபத்து மீட்புப் பணிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அறிவித்த நிலையில் குழு விரைவு.

 

 

சார்ந்த செய்திகள்