Skip to main content

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம் - மத்திய அரசு அறிவிப்பு!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

covid vaccine

 

இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்தும் பணிகள், கடந்த ஜனவரி 16 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணிகளில், சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பிப்ரவரி 13 முதல் சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

 

இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் கரோனா தடுப்பூசி வழங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

 

கரோனா தடுப்பூசி பணிகளை ஒருங்கிணைக்கும் கோ-வின் செயலி, 1.0 வெர்சனிலிருந்து 2.0 வாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற இருப்பதால், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளையும் (27.02.21), நாளை மறுநாளும் (28.02.21) நடைபெறாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்