Skip to main content

இந்தியாவில் மீண்டும் உயர்ந்த கரோனா பாதிப்பு.... ஒரே நாளில் 12 ஆயிரம் பேர் பாதிப்பு!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

df

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆரம்பத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,143 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 103 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.

 

நோய் தொற்றில் இருந்து 11,395 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் கீழே இருந்த கரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்