Skip to main content

குறையும் பாதிப்பு... கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

jhk

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்துவருகிறது. இதுவரை 17 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 37 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவைப் பொருத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கரோனா வேகமாகப் பரவிவந்த நிலையில், தற்போது சற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,00,636 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,427 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து நேற்று (06.06.2021) ஒரே நாளில் 1,74,399 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் இதுவரை 2.71 கோடி பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 14 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதேபோன்று உயிரிழப்பு எண்ணிக்கையும் சீராக குறைந்துவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்