Skip to main content

ஆறு மாதத்தில் தேர்தல்; காங்கிரஸ் பிரமுகரை தட்டித்தூக்கிய பாஜக

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

Hardik Patel joins BJP ahead of Gujarat Assembly polls

 

படேல் சமூக மக்களின் இட ஒதுக்கீட்டுக்காக கடந்த 2015ஆம் ஆண்டு தொடர் போராட்டம் நடத்தியதன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றவர் ஹர்திக் படேல். 29 வயதேயான இவர், 2020ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். குஜராத் மாநில காங்கிரஸின் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல், காங்கிரஸ் கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அகில இந்திய தலைவர் சோனியா காந்திக்கு அண்மையில் கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து, காங்கிரஸில் இருந்து விலகிய ஹர்திக் படேல், இன்று பாஜகவில் இணைந்தார்.

 

குஜராத்தில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் இணைந்த ஹர்திக் படேல், ”உலகத்தின் பெருமையாக பிரதமர் மோடி இருக்கிறார். நான் சிறு சிப்பாயாக எனது வேலையை செய்யவிருக்கிறேன்” எனத் தெரிவித்தார். மேலும், காங்கிரஸில் உள்ள எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகளை பாஜகவில் இணையவைக்க 10 நாட்களுக்கு ஒரு முறை நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

 

இந்தாண்டு இறுதியில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹர்திக் படேலின் விலகல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்குமென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவில் இணைய நாள் குறித்த ஹர்திக் பட்டேல்!

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

lkj

 

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில் நாளை மறுநாள் பாஜகவில் இணைய உள்ளார் ஹர்திக் பட்டேல்.

 

கடந்த 2015ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ஹர்திக் பட்டேல். அதிகப்படியான மக்கள் செல்வாக்கால் அரசியல் கட்சியினரை ஆச்சரியப்படுத்தி அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸில் இணைந்தார். இதற்கிடையே திடீர் திருப்பமாகக் கடந்த 18ம் தேதி அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். தன்னை குஜராத் காங்கிரஸ் கமிட்டி ஒதுக்குவதாகக் குற்றம் சாட்டிய அவர் விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

 

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நாளை மறுநாள் தான் பாஜகவில் இணைய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். விரைவில் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரின் வருகை மாநில பாஜகவுக்கு மேலும் வலிமை தருவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் பாஜகவில் இணைந்து சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றால் துணை முதல்வர் பதவி கேட்போம் என்று அவரின் ஆதரவாளர்கள் உறுதியாகக் கூறியுள்ளார். ஆனால் பதவி தொடர்பாக இதுவரை எதுவும் பேசவில்லை என்று ஹர்திக் பட்டேல் மறுத்துள்ளார். 

 

 

Next Story

20 நாட்களாக ஹர்திக் பட்டேலை காணவில்லை!!-மனைவி புகார் 

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

காங்கிரசை சேர்ந்த பட்டேல் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேலை காணவில்லை என அவரது மனைவி கின்ஜால் புகார் அளித்துள்ளார். அவர் மீது இருந்த பழைய வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்து ஹர்திக்கிற்கு தற்போது குஜராத் அரசு நெருக்கடி தருவதாக வீடியோ மூலம் அவர் இந்த புகாரை தெரிவித்துள்ளார்.

 

 Hardik Patel missing for 20 days !!

 

காணாமல் போனதாக கூறப்படும் ஹர்திக் பட்டேல் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.