Skip to main content

சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கக் கோரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Fishermen  demanding to ban  short nets


சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக கூறி, அரசு சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதித்துள்ளது. தற்போது மீன்பிடி தடை விலகி மீன்பிடிக்க தொடங்கியுள்ள நிலையில், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரி புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளில் ஒருதரப்பு மீனவர்கள் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இதேபோல் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று மற்றொரு தரப்பு மீனவர்களும் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். 

 

புதுச்சேரி கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலான 18 கிராம மீனவர்கள் கடந்த 19ஆம் தேதிமுதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

இந்த நிலையில், விசைப்படகு, ஃபைபர், எஃப்.ஆர்.பி படகு, கட்டுமர உரிமையாளர்கள், மீனவர்கள் ஆகியோர் புதுச்சேரியில் காந்தி சிலை எதிரே கடலில் படகுகளுடன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 120 விசைப்படகுகள், ஃபைபர் படகுகள், எஃப்.ஆர்.பி கட்டுமர படகுகளுடன் 250க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், மீனவர்கள் கடலில் நின்றபடி போராட்டம் நடத்தினர்.

 

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் புதுச்சேரியில் சுருக்குமடி வலை பயன்பாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இந்தப்போராட்டம் குறித்து செய்தியாளரிடம் பேசிய புதுச்சேரி ஃபைபர் படகு உரிமையாளர்கள், "புதுச்சேரியில் சுருக்குமடி வலை பயன்படுததி மீன்பிடிக்க அரசு அனுமதிக்கக் கூடாது. இதனால் மீனவர்களுக்குள் பிளவு ஏற்பட்டு, மோதல் ஏற்படும் சூழல் உருவாகும். எனவே இதைப் புதுச்சேரி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் படகுகளுடன் கடலில் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்" என்றனர்.

 

தலைமைச் செயலகம் முன்பு நடந்த போராட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்தப் போராட்டத்தையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில், கிழக்கு எஸ்.பி ரக்க்ஷனா சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Next Story

தமிழக மீனவர்கள் 21 பேருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு! 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
21 fishermen of Tamil Nadu have been sentenced to judicial custody

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (16.03.2024) காலை 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே இன்று (17.03.2024) மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதே சமயம் மீனவர்கள் 21 பேரை சிறைப் பிடித்து ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் 21 பேரையும் மார்ச் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டதுடன் இவர்களை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் தமிழக மீனவர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்கள் நடத்தி இருந்தனர். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியிருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 10/03/2024 அன்று 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.