Skip to main content

பாரத் எனத் தனது சேவைக்குப் பெயர் மாற்றிய பிரபல டெலிவரி நிறுவனம்!

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

A famous delivery company that changed the name of its service to Bharat!

 

இந்தியா - பாரத் எனத் தொடர்ந்து நம் நாட்டின் பெயர் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ஜி20 மாநாட்டில் பிரதமருக்கு முன்பு இருந்த பெயர்ப் பலகையில் ‘பாரத்’ என இருந்தது. இது மீண்டும் பேசுபொருளானது. முன்னதாக இந்த விவாதம் துவங்கிய நிலையில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், நாட்டின் பெயரை பாரத் என மாற்றப்போவதாகப் பரவும் தகவல் வதந்தி என்று தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், பிரபல டெலிவரி நிறுவனமான புளூ டார்ட் தனது பிரீமியம் டெலிவரி சேவையை இந்தியாவில் ‘டார்ட் பிளஸ்’ -இல் இருந்து ‘பாரத் டார்ட்’ என மாற்றுவதாக அறிவித்துள்ளது. 

 

இது குறித்து ப்ளூ டார்ட் நிறுவனம், “இந்த வியூக மாற்றம் ப்ளூ டார்ட்டின் பயணத்தில் முக்கிய மைல் கல்லைக் குறிக்கிறது. ப்ளூ டார்ட் பாரதத்தின் பல்வேறு தேவைகளுக்கு சேவை செய்வதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. ப்ளூ டார்டின் இந்த பெயர்மாற்ற முடிவு, விரிவான ஆராய்ச்சி செயல்முறைக்கு பின்னரே, அதன் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப தன்னை இணைத்துக் கொள்வதன் நோக்கமாக உருவானது. 

 

தொடர்ந்து, பாரதத்தில் எக்ஸ்பிரஸ் தளவாடங்களை மறுவரையறை செய்ய 'பாரத் டார்ட்' தயாராக உள்ளது. இந்த சேவை அனைத்து வணிகங்களுக்கும் ஒப்பிட முடியாத வேகத்தையும், பாதுகாப்புடன் ஆதரவையும் வழங்குகிறது. இந்தியாவை உலகத்துடனும், உலகை பாரதத்துடனும் இணைக்கும் ப்ளூ டார்ட் நிறுவனம் தொடர்ந்து மாற்றத்திற்கான பயணத்தில் உள்ளது. எனவே அனைத்து பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இனைந்து செயல்பட வேண்டும்" எனவும் கூறியுள்ளது.

 

இது குறித்து, புளூ டார்ட்டின் நிர்வாக இயக்குநர் பால்ஃபோர் மானுவல் கூறுகையில், “பரந்து விரிந்த இந்த நாட்டிலுள்ள பகுதிகளுக்கு நாங்கள் தொடர்ந்து டெலிவரி செய்து வருவதால், இந்த மறுபெயரிடுதல் எங்களுக்கு ஒரு அற்புதமான மாற்றத்தை, பிரதிபலிப்பை அளித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

 

இந்த பெயர் மாற்ற அறிவிப்பிற்குப் பிறகு ப்ளூ டார்டின் பங்கு 2 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இந்தியா எதிரி நாடுதான் இருந்தாலும்...” - பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Pakistan Opposition Leader says Though India is an enemy country

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்றது. கடைசிக் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி நடைபெற்று, முடிவுகள் ஜூன் 4ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டன. அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது, தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவர் சையத் ஷிப்லி ஃபராஸ், சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலை இந்தியா சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தியதற்காகப் பாராட்டியதோடு, தனது நாட்டிலும் இதேபோன்ற செயல்முறையை நடத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் செனட்டில் பேசிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர் சையத் ஷிப்லி ஃபராஸ், “எதிரி நாட்டின் உதாரணத்தை நான் மேற்கோள் காட்ட விரும்பவில்லை. இருந்தாலும் சமீபத்தில், அங்கு (இந்தியா) தேர்தல்கள் நடத்தப்பட்டன.  800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்தனர். ஆயிரக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான வாக்குச் சாவடிகள் இருந்தன. சில வாக்குச் சாவடிகள் ஒரு இடத்தில் ஒரு வாக்காளருக்காகவும் அமைக்கப்பட்டன. ஒரு மாத காலப் பயிற்சி முழுவதும் இ.வி.எம்கள் மூலம் நடத்தப்பட்டது. மக்களவைத் தேர்தலில் முறைகேடு நடந்ததா என்று இந்தியாவில் இருந்து ஒரு குரல் கூட கேட்கவில்லை. 

எவ்வளவு சீராக மின்சாரம் பரிமாறப்பட்டது. நாமும் அதே நிலையில் இருக்க விரும்புகிறோம். இந்த நாடு சட்ட உரிமைக்காகப் போராடி வருகிறது. இங்கே, வாக்கெடுப்பில் தோற்றவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மேலும் வெற்றியாளரும் அவரது சொந்த விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்படியான அணுகுமுறை நமது அரசியல் அமைப்பை வெறுமையாக்கியுள்ளது” என்று கூறினார். 

Next Story

மோடி தொடர் பின்னடைவு; சவால் கொடுக்கும் முடிவு நிலவரம் !

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Continued Modi backlash; Challenging decision situation

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  9.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 283 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 255 இடங்களிலும், மற்றவை 23 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை விட காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது சுற்றிலும் மோடி பின்னடைவை சந்தித்துள்ளார். இரண்டாவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 14,503 வாக்குகளும் மோடி 9,505  வாக்குகளும் பெற்றுள்ள நிலையில் மோடி பின்னடைவைச் சந்தித்துள்ளார்.